பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்று 5 வருடம் நிறைவடைய உள்ள நிலையில், அதுகுறித்து தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.
குஜராத் முதல்வராக இருந்து பின்னர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் வேட்பாளர் ஆகி, இரு தொகுதியில் போட்டியிட்டு, இரண்டிலும் வென்று, வாராணசி தொகுதியை மட்டும் வைத்துக் கொண்டு, பிரதமராகப் பதவி வகித்து, ஐந்து வருடத்தை நிறைவு செய்கிறார் பிரதமர் மோடி.
இந்நிலையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது 5 வருடங்களுக்கு முந்தைய தனது நினைவுகளைச் சொல்லி அவை நீங்காத பசுமையான நினைவுகள் என்று சிலாகித்துள்ளார்.
130 கோடி இந்தியர்களின் ஆசிகளுடன் தாம் தமது பணிக்கு வந்ததாகவும், அவர்களின் ஆசிகளை நிறைவேற்றுவதற்காக உழைத்ததாகவும் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, பாதுகாப்பான,வலிமையான, வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைப்பதற்காகப் பணியாற்றியதாகக் கூறியுள்ளார்.
இன்று நம் மீதான எதிர்பார்ப்பும், ஆதரவும் மேலும் அதிகரித்திருக்கிறது என்று கூறியுள்ள மோடி, மக்களின் கனவுகள் நனவாவதற்காக மேலும் கடுமையாக உழைப்போம் என்று கூறியுள்ளார்.