தில்லி சந்திப்புகள் ‘கட்’; லக்னோவில் அகிலேஷுடன் சந்திப்பு: மாயாவதி அடித்த அந்தர் பல்டி!

mayavati akilesh - 2026

தில்லியில் மாயாவதிக்கு இன்று எந்த நிகழ்ச்சியோ, சந்திப்போ இல்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி திடீர் பல்டி அடித்துள்ளது.  தில்லியில் இன்று ராகுல், சோனியாவை மாயாவதி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இத்தகைய அறிவிப்பினை வெளியிட்டது பகுஜன் சமாஜ் கட்சி!

தேர்தலுக் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில் பகுஜன் சமாஜ் திடீரென இந்த அறிவிப்பை வெளியிட்டது. தொடர்ந்து  தில்லி சந்திப்பு எதுவும் இல்லை என்று ரத்து செய்துவிட்டு, லக்னோவில் அகிலேஷ் யாதவை சந்தித்து பேசியுள்ளார் மாயாவதி.

பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதியுடன் கூட்டணி வைத்து உ.பி.யில் தேர்தலை சந்தித்தது இந்த முறை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பரம வைரிகளாகக் கருதும் இருகட்சிகளும் ஒரே மேடையில் நின்றதும், அகிலேஷின் தந்தை முலாயம் திக்கித் திணறி, வேண்டாவெறுப்பாக கைகோத்ததும் அரசியல் வானில் அதிசயமாகப் பார்க்கப் பட்டது.

மகா கட்பந்தன் என்று பெரும் கூட்டணிக்கு திட்டமிட்டு தேர்தலை சந்தித்தன இரு கட்சிகளும். காங்கிரஸின் தலைவர் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்க மறுத்து, காங்கிரஸ் கட்சியை கூட்டணி சேர்க்காமல் கழற்றி விட்டன. எப்படியும் 30 க்கும் மேற்பட்ட இடங்களை இரு கட்சிகளும் தனித்தனியாகப் பிடிக்கும் பட்சத்தில், பிரதமர் ஆகிவிடலாம் என்ற கனவுடன் மாயாவதி இருந்ததும், அது தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகளில் தகர்ந்து போனதும் தற்போது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

லக்னோவில் மாயாவதி, அகிலேஷ் யாதவ் இருவரும் சந்தித்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக, 1977ஆம் ஆண்டு ரேபரேலி தொகுதியில் இந்திரா தோற்றத்தை போல, வாரணாசியில் பிரதமர் மோடி தோற்க வேண்டும் என மாயாவதி கடும் சாபத்தைக் கொடுத்தார். அவர் தனது  டுவிட்டர் பதிவில்,  குஜராத்தின் வளர்ச்சியைப் போல, உ.பி.,யின் கிழக்கு பகுதியில் வறுமை, வேலை வாய்ப்பின்மை உள்ளிட்ட  பிரச்னைகள் நீக்கப்படவில்லை. அங்கு எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றாமல், மக்களை, யோகி ஆதித்யநாத்தும், நரேந்திர மோடியும் ஏமாற்றிவிட்டனர்.

கோரக்பூர் தொகுதியில் யோகியை மக்கள் நிராகரித்தனர். மோடியின் வெற்றியைவிட, அவரது தோல்வி வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும். 1977-ஆம் ஆண்டு ரேபரேலி தொகுதியில் இந்திரா தோற்கடிக்கப்பட்டார். அதுபோல் இப்போது வாரணாசி தொகுதியில் மீண்டும் நிகழுமா?

மாநிலத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துவதை விடுத்து, வகுப்புவாரியான வன்முறையையும், ஜாதி ரீதியான கலவரத்தையும் மத்திய மாநில அரசுகள் தூண்டி
விடுகின்றன.. என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று மாயாவதி, தில்லியில் சோனியா மற்றும் ராகுலை சந்திக்க உள்ளதாகக் கூறப் பட்டது.  ஆனால் தற்போது அந்த முடிவை மாயாவதி கைவிட்டுவிட்டார்.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories