தில்லி சந்திப்புகள் ‘கட்’; லக்னோவில் அகிலேஷுடன் சந்திப்பு: மாயாவதி அடித்த அந்தர் பல்டி!

mayavati akilesh - 2026

தில்லியில் மாயாவதிக்கு இன்று எந்த நிகழ்ச்சியோ, சந்திப்போ இல்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி திடீர் பல்டி அடித்துள்ளது.  தில்லியில் இன்று ராகுல், சோனியாவை மாயாவதி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இத்தகைய அறிவிப்பினை வெளியிட்டது பகுஜன் சமாஜ் கட்சி!

தேர்தலுக் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில் பகுஜன் சமாஜ் திடீரென இந்த அறிவிப்பை வெளியிட்டது. தொடர்ந்து  தில்லி சந்திப்பு எதுவும் இல்லை என்று ரத்து செய்துவிட்டு, லக்னோவில் அகிலேஷ் யாதவை சந்தித்து பேசியுள்ளார் மாயாவதி.

பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதியுடன் கூட்டணி வைத்து உ.பி.யில் தேர்தலை சந்தித்தது இந்த முறை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பரம வைரிகளாகக் கருதும் இருகட்சிகளும் ஒரே மேடையில் நின்றதும், அகிலேஷின் தந்தை முலாயம் திக்கித் திணறி, வேண்டாவெறுப்பாக கைகோத்ததும் அரசியல் வானில் அதிசயமாகப் பார்க்கப் பட்டது.

மகா கட்பந்தன் என்று பெரும் கூட்டணிக்கு திட்டமிட்டு தேர்தலை சந்தித்தன இரு கட்சிகளும். காங்கிரஸின் தலைவர் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்க மறுத்து, காங்கிரஸ் கட்சியை கூட்டணி சேர்க்காமல் கழற்றி விட்டன. எப்படியும் 30 க்கும் மேற்பட்ட இடங்களை இரு கட்சிகளும் தனித்தனியாகப் பிடிக்கும் பட்சத்தில், பிரதமர் ஆகிவிடலாம் என்ற கனவுடன் மாயாவதி இருந்ததும், அது தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகளில் தகர்ந்து போனதும் தற்போது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோவில் மாயாவதி, அகிலேஷ் யாதவ் இருவரும் சந்தித்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக, 1977ஆம் ஆண்டு ரேபரேலி தொகுதியில் இந்திரா தோற்றத்தை போல, வாரணாசியில் பிரதமர் மோடி தோற்க வேண்டும் என மாயாவதி கடும் சாபத்தைக் கொடுத்தார். அவர் தனது  டுவிட்டர் பதிவில்,  குஜராத்தின் வளர்ச்சியைப் போல, உ.பி.,யின் கிழக்கு பகுதியில் வறுமை, வேலை வாய்ப்பின்மை உள்ளிட்ட  பிரச்னைகள் நீக்கப்படவில்லை. அங்கு எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றாமல், மக்களை, யோகி ஆதித்யநாத்தும், நரேந்திர மோடியும் ஏமாற்றிவிட்டனர்.

கோரக்பூர் தொகுதியில் யோகியை மக்கள் நிராகரித்தனர். மோடியின் வெற்றியைவிட, அவரது தோல்வி வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும். 1977-ஆம் ஆண்டு ரேபரேலி தொகுதியில் இந்திரா தோற்கடிக்கப்பட்டார். அதுபோல் இப்போது வாரணாசி தொகுதியில் மீண்டும் நிகழுமா?

மாநிலத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துவதை விடுத்து, வகுப்புவாரியான வன்முறையையும், ஜாதி ரீதியான கலவரத்தையும் மத்திய மாநில அரசுகள் தூண்டி
விடுகின்றன.. என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று மாயாவதி, தில்லியில் சோனியா மற்றும் ராகுலை சந்திக்க உள்ளதாகக் கூறப் பட்டது.  ஆனால் தற்போது அந்த முடிவை மாயாவதி கைவிட்டுவிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories