காணாமல் போனது காவல்காரன்..! இனி அது டிவிட்டரில் இல்லை செயலில்! : பிரதமர் மோடி

modi in kashmir katuva - 2026

பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய ட்விட்டர் பதிவில் இருந்து சௌக்கிதார் என்ற காவல்காரன் என்ற பொருள்படும் பெயரை நீக்கியுள்ளார்! எனவே அனைவரும் சௌக்கிதார் என்ற பட்டப் பெயரை தங்கள் ட்விட்டர் கணக்கில் இருந்து நீக்கி கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி தன்னை சௌக்கிதார் அதாவது, காவல்காரன் என்று பிரசார கூட்டங்களில் கூறிக் கொண்டார். இதை அடுத்து காவல்காரன் ஒரு திருடன் என்று பொருள்படும் வகையில் ராகுல்காந்தி மோடியை விமர்சித்தார். குறிப்பாக, ரபேல் விமான விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று ராகுல் விமர்சித்தது பெரிய அளவில் பேசப்பட்டது !

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது பெயருக்கு முன் சௌக்கிதார் நரேந்திர மோடி என்று டிவிட்டர் பதிவுகளில் மாற்றிக் கொண்டார்! மேலும் தனது சௌக்கிதார் என்ற பிரசாரத்துக்கு ஆதரவு அளிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டார். தன் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்கள் சௌக்கிதார் என்று போட்டுக் கொள்ளுமாறு ஒரு பிரச்சாரத்தையும் துவக்கி வைத்தார்! அது பெரிய அளவில் மக்களிடம் சென்று அடைந்தது!

முந்தைய தேர்தலில் சாய்வாலா என்று டீக்கடைக்காரர் மோடி என்று அழைத்த ராகுல் காந்தியால் பிரதமர் மோடிக்கு பெரிய அளவில் வெற்றி கிடைத்தது! இந்த முறை சௌக்கிதார் காவல்காரன் என்று ராகுல் காந்தி அழைத்ததால் இப்போதும் பிரதமர் மோடிக்கு பெரிய அளவில் வெற்றி கிடைத்துள்ளதுmodi twitter page - 2026

ALSO READ:  தமிழகத்தின் ‘மக்கள் ஆளுநர்’!

இந்நிலையில் தனது சௌக்கிதார் என்ற பெயரை தன் ட்விட்டர் பதிவில் இருந்து நீக்கப் போவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்! இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் தங்களை சௌக்கிதாராக, காவல்காரர்களாக மாற்றிக் கொண்டார்கள் என்றும், இந்த நாட்டுக்காக மிகப் பெரிய சேவையைப் அவர்கள் செய்துள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ள மோடி, காவல்காரன் என்ற அந்தச் சொல் மிகவும் சக்தி வாய்ந்த அடையாளமாக இந்தியாவைப் பாதுகாக்கும் அடையாளமாக ஊழல் மதவாதம் சாதிவாதம் ஆகிய பேய்களிடம் இருந்து நாட்டைப் பாதுகாக்கும் ஓர் அடையாளமாக மாறிப் போனது என்று குறிப்பிட்டுள்ளார் மோடி.

எனவே, தாங்களும் ஒரு காவல்காரரே என்ற அந்த மக்களின் உணர்வை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்புவதாகக் கூறியுள்ள மோடி, காவல்காரன் என்ற இந்த உள்ளுணர்வை ஒற்றுமையை இந்தியாவின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பதிவில் இருந்து காவல்காரன் சென்று விடும் என்றும், அது இனி தனது உள்ளார்ந்த அங்கமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்! இதை அனைவரும் பின்பற்றுமாறு அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

இந்நிலையில் அவருடைய டிவிட்டர் பதிவிலிருந்து சௌக்கிதார் – காவல்காரன் என்ற அடைமொழி பெயர் நீக்கப்பட்டு வழக்கம்போல் நரேந்திர மோடி என்ற பெயர்  டிவிட்டரில் பளிச்சிடுகிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories