சுஷ்மா ஸ்வராஜ் ஆந்திர ஆளுநரா? அமைச்சர் டிவிட்டும் அதற்கான பதிலும்!

sushma swaraj - 2026

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆந்திரப் பிரதேசத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மை அல்ல என அவர் விளக்கம் அளித்துள்ளார்!

வெளியுறவுத்துறை அமைச்சராக முந்தைய மோடி அரசில் இருந்த சுஷ்மா ஸ்வராஜ், இந்த முறை வயதாகி விட்டதாலும், உடல் நிலை ஒத்துழைக்க வில்லை என்றும் கூறி, போட்டியிடுவதில் இருந்து தவிர்த்தார்.

முந்தைய அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது, ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் துடிப்புடன் இருந்தார். அவரது வெளியுறவு அமைச்சகவும், அதிகாரிகளும் டிவிட்டரில் பதிவிடும் புகார்கள், உதவிக் கேட்புகளுக்கு உடனடி பதில் கொடுத்து, உதவி செய்து, உலக அளவில் பிரபலம் ஆனவர். வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலருக்கு உடனுக்குடன் உதவினார். இதனால், உலக அளவில் அதிகம் பேரால் டிவிட்டர் வலைத்தளத்தில் பின்தொடரப்படும் வெளியுறவுத்துறை அமைச்சராக புகழ் பெற்றார்.

தற்போது, முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்! இந்நிலையில், ஆந்திரப் பிரதேச ஆளுநராக சுஷ்மா ஸ்வராஜ் நியமிக்கப்படலாம் என பேச்சு எழுந்தது. இது குறித்து சமூக வலைத்தளங்களிலும் பேச்சு அடிப்பட்டது. பலரும் இதனைப் பகிர்ந்தார்கள்.

harshvarthantweet 1 - 2026harshvarthantweet - 2026அதற்கு ஏற்ப, மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தனது ட்விட்டர் பக்கத்தில், “முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்துக்கள்” என பதிவிட்டார். ஆனால், சில நிமிடங்களிலேயே அதை நீக்கிவிட்டார்.

தற்போது தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் என இரு மாநிலங்களின் ஆளுநராக ஈஎஸ்எல் நரசிம்மன் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் அதிகாரபூர்வமாக ஆளுநர் நியமனம் குறித்த அறிவிப்பு வருவதற்குள் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் அவசரப்பட்டு ட்விட்டரில் பதிவு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது!

ஹர்ஷ்வர்த்தனனின் டிவிட்டர் பதிவுக்கு சுஷ்மா ஸ்வராஜ் அளித்த டிவிட்டர் பதிலில், அவர், “நான் ஆந்திரப் பிரதேசத்தின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதாக வரும் செய்தி உண்மை அல்ல” என்று கூறினார். இதை அடுத்து, பலரும் இதை பகிர்ந்துவருகிறார்கள்.

அரசியலில் இருந்து ஓய்வு பெறுபவர்களுக்குத்தான் ஆளுநர் பதவி அளிக்கப்படும் என்பது பொதுவான கருத்து.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories