சந்திரபாபுவின் ‘ஹெரிடேஜ்’ நெய்யால் துலாபாரம்! திருப்பதி தேவஸ்தான சேர்மனாக ஜெகன் உறவினர் பதவிஏற்பு!

Published:

ap thulaparam - 2026

ஆந்திர முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்தாருக்குச் சொந்தமான ஹெரிடேஜ் நிறுவனத்தின் நெய்யால் திருமலா திருப்பதி தேவஸ்தான சேர்மனாக  பதவி ஏற்றுக் கொண்ட தற்போதைய முதல்வர் ஜெகன் மோகனின் உறவினர் சுப்பா ரெட்டி துலாபாரம் நடத்தினார்! இது சமூக வலைத்தளங்களில் பெரும் அமளிதுமளிப் பட்டது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டியின் நெருங்கிய உறவினரும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான சுப்பா ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியானது. ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் மன்மோகன் சிங் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

இதை அடுத்து, திருப்பதி தேவஸ்தான தலைவராக சனிக்கிழமை நேற்று சுப்பா ரெட்டி பதவியேற்றார். திருப்பதி தேவஸ்தான கமிட்டியின் பிற உறுப்பினர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

நியமன பதவியான திருப்பதி தேவஸ்தான தலைவர் பொறுப்பு, கேபினட் அந்தஸ்து கொண்டதாகும். மிகவும் செல்வாக்கு மிக்க பொறுப்புகளில் ஒன்றாக ஆந்திராவில் தேவஸ்தான தலைவர் பொறுப்பு விளங்குகிறது. இந்தப் பொறுப்புக்கு தனது சித்தப்பாவான சுப்பா ரெட்டியை ஜெகன் மோகன் நியமித்துள்ளார்.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

இதை அடுத்து, திருமலை திருப்பதி தேவஸ்தான சேர்மனாக ஒய் வி சுப்பாரெட்டி சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். இதன் பின்னர் அவர் ஹெரிடேஜ் நெய்யால் துலாபாரம் ஏறினார்.

ஒய் எஸ் ஆர் கட்சியின் மூத்த தலைவர் ஒய் வி சுப்பாரெட்டி நடந்தே திருமலை சென்றடைந்தார். பின் முடி இறக்கிக் கொண்டு வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டார். திருப்பதிப் பெருமாளை தரிசனம் செய்தபின்னர், கருடாழ்வார் சந்நிதியில் டிடிடி சேர்மனாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் அங்கிருந்த தராசில் ஹெரிடேஜ் நெய்யால் துலாபாரம் செய்து கொண்டார். அந்த ஒளிப் படங்கள் ஊடகங்களில் வைரலானது.

ஹெரிடேஜ் நிறுவனம், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மருமகள் நடத்துவது. இந்த நிர்வாகத்தின் நெய்யை துலாபாரத்துக்கு உபயோகித்ததை பலரும் கிண்டல் கேலி செய்து வருகின்றனர். ஹெரிடேஜ் நெய் தரம் உயர்ந்தது என்பதால் தான் நாயுடு ஆட்சி  போன பிறகும் அதனை பயன்படுத்துகிறார்கள் என்று தெலுங்குதேசம் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர்.

ஆனால் ஒய்எஸ்ஆர் கட்சியினர் அதற்கு பதில் அளிக்கும் வகையில், திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஹெரிடேஜ் நெய் நிறுவனத்துடன்  ஒப்பந்தம் உள்ளதால் அவ்வாறு செய்துள்ளனர் என்று கூறியிருக்கின்றனர். துலாபாரம் துவங்கியதே சர்ச்சையில் என்பதால் திருமலை திருப்பதி கோவில் நிர்வாகமும் வருங்காலங்களில் சர்ச்சைகளுடனும் பரபரப்புகளுடனும் இருக்கும் என்று கேலி செய்து வருகின்றனர் சமூக வலைத்தளங்களில்!

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img