பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா! 2008ல் கோலி பெற்ற யு-19 வெற்றி திரும்புமா?

worldcup pointtable - 2026

உலகக் கோப்பை போட்டிகளில் நேற்று மான்செஸ்டர் ஓல்ட் ட்ரஃபோர்ட் நகரில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப் பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 325 ரன் எடுத்தது.

தொடக்க ஆட்டக்காரர்களான மார்க்ரம் 34 ரன்னும் டி கோக் 52 ரன்னும் எடுத்து நல்ல அடித்தளம் இட்டனர். பின்னர் வந்த டு பிளஸிஸ் 100 ரன்னும், டுஸென் 95 ரன்னும் எடுத்தனர். இதனால் தென்னாப்பிரிக்க அணி 325 ரன்கள் எடுக்க முடிந்தது.

தொடர்ந்து 326 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் வார்னர் 55 ரன் எடுத்தார். ஆரூன் பின்ச், கவாஜா, ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தனர். ஸ்டொய்னிஸ் 22 ரன்னும், மேக்ஸ்வெல் 12 ரன்னும் எடுத்தனர். காரே 85 ரன் எடுத்தார். பின்னர் வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 315 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. இதை அடுத்து தென்னாப்பிரிக்க அணி 10 ரன்னில் வெற்றி பெற்றது

இதனால் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு வந்தது ஆஸ்திரேலியா. முதலிடத்துக்கு இந்திய அணி முன்னேறியது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டிகள் விவரம்

வரும் 9ஆம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணி, நான்காவது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது.

11ஆம் தேதி நடைபெறும் 2-வது அரையிறுதி போட்டியில் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா – மூன்றாவது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

ind nz - 2026

கடந்த 2008ல் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் அரையிறுதியில் மோதின.

2008 யு-19 அரையிறுதியில்… முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழந்து 205 ரன் எடுத்தது. பின்னர் இந்திய அணி, 43 ஓவரில் 191 ரன் என்ற இலக்கைக் கொண்டு ஆடத் தொடங்கி, 41.3 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் நியூஸிலாந்து கேப்டர் வில்லியம்ஸன் 80 பந்துகளில் 37 ரன் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் அடங்கும். அதே நேரம் இந்திய கேப்டன் விராட் கோலி, 53 பந்துகளில் 43 ரன் எடுத்தார். இதில் 5 பவுண்டரிகள் அடங்கும்.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

2008ல், யு-19 உலகக் கோப்பையில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த முறை, சுமார் 11 ஆண்டுகளுக்குப் பின்னர், உலகக் கோப்பை போட்டியில் அதே இருவர் தலைமையிலான இரு அணிகளும் அரையிறுதியில் மோதுகின்றன என்பது ஆச்சரியப் பட வைக்கும் செய்தி. இதில் இந்திய அணி வென்று, அதே சாதனையை கோலி படைப்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories