December 6, 2025, 12:00 PM
29 C
Chennai

தங்கத்தை உண்ட பெண் ! அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட ஒன்றரை கிலோ தங்கம்!

opretion 1 - 2025
மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுவந்துள்ளார். அந்தப் பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், அவர் குடும்பத்தினரின் தொடர் கண்காணிப்பிலே இருந்துள்ளார். இரண்டு மாதங்களாக வயிற்றில் வலி இருப்பதாகக் கூறியுள்ளார். அவரது குடும்பத்தினரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சையாக அழைத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து சிகிச்சை பெற்றும் அவருக்கு வலி குறைந்ததாகத் தெரியவில்லை.

இதையடுத்து, அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவரது வயிற்றில் ஸ்கேன் செய்து பார்த்ததில் சில பொருள்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளனர்.
nanayam - 2025
அறுவை சிகிச்சை செய்ததில் அவரது வயிற்றிலிருந்து 1.5 கிலோ அளவுக்கு நகைகள் மற்றும் காசுகளை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். அந்தப்பெண் தற்போது நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “அந்தப் பெண்ணின் வயிற்றில் 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்கள், மூக்குத்தி, தோடு, வளையல், கைகளில் அணியும் ப்ரஸ்லட் ஆகியவை இருந்தன. அவற்றில் சில தங்க நகைகளும் இருந்தன” என மருத்துவர்கள் கூறினர்.

அந்தப் பெண்ணின் தாயார் கூறுகையில், “என் மகள் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில நாள்களாக சாப்பிட்ட பின்னர் எல்லாப் பொருள்களையும் தூக்கி எறிந்தார்.  எங்கள் வீட்டில் இருந்த நகைகள்தான் இவையனைத்தும். ஆனால், இதை விழுங்கியிருப்பாள் என நாங்கள் நினைக்கவில்லை. காணாமல் போன பொருள்கள் குறித்துக் கேட்டுள்ளோம். அப்போது எல்லாம் அழத் தொடங்கிவிடுவார்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories