நிர்வாண நிலையில் மனநோயாளிகள்: மேற்கு வங்க அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Published:

புதுதில்லி:

அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த அஞ்சலி என்பவர், சுதந்திர தினத்தன்று மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பெர்கம்பூர் மனநல மருத்துவமனைக்கு சென்று உள்ளார். அங்கே ஓர் அழுக்கு நிறைந்த அறையில் மனநலம் குன்றிய சில ஆண் மற்றும் பெண் மனநோயாளிகள் நிர்வாணமாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்த தகவல்கள் ஊடகங்களில் செய்தியாக வெளியானது. இது குறித்த புகாரின் பேரில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் மேற்கு வங்காள அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிள்ளது.

அவர்கள் மாதக் கணக்காக குளிக்காமலும், மழிக்கப் படாமலும் இருந்தனர். அவர்களுக்கு பல்வேறு நோய்கள் இருந்ததற்கான அறிகுறிகள் இருந்தன. கழிவறைகள் யாரும் பயன்படுத்த முடியாதவாறு மிகவும் மோசமாக இருந்தது. படுக்கையில் மூட்டைப்பூச்ச்சிகள் ஊர்ந்து சென்றன. சலவை வசதி இல்லை. முடித்திருத்துபவர் இல்லை, குளியறைகள் மோசமான நிலையில் உள்ளன. இதில் நோயாளிகள் தடுமாறி விழுந்து காயம் அடைந்து உள்ளனர் என மனித உரிமைகள் ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. தேசிய மனித உரிமை ஆணையம் மேற்கு வங்க அரசாங்கத்தின் தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பிள்ளது.

மருத்துவமனைகளில், மாநில அரசால் நடத்தப்படும் நிலையை மன நல மருத்துவமனை குறித்து விரிவான அறிக்கை வழங்க கேட்டு கொண்டு உள்ளது. ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மனித உரிமைகள் ஆணையம் தானாக எடுத்து உள்ளது.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

ஊடகங்களில் வெளியான செய்திகளின் படி ஆகஸ்ட் 17-ம் தேதியன்று சுமார் 430 நோயாளிகள், ஆண்கள் மற்றும் பெண்கள் நோயாளிகள் மனநல மருத்துவமனையில் உள்ளனர்.

 

 

Related articles

Recent articles

spot_img