காஷ்மீர்; மத்திய அரசின் முடிவு: வரவேற்பு தெரிவித்த ஆர்.எஸ்.எஸ்., தலைவர்!

rss welcomes centre decision - 2026

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப் பட்டதற்கும், காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப் பட்டு, லடாக், காஷ்மீர் பிரதேசங்கள் யூனியன் பிரதேசங்களாக அமைக்கப் படுவதற்கும் வரவேற்பு தெரிவித்துள்ளது ஆர்.எஸ்.எஸ்.,

இது குறித்து ஆர்.எஸ்.எஸ்.ஸின் தலைவர் மோகன் ஜி பாகவத், மற்றும், செயலாளர் பையாஜி ஜோஷி வெளியிட்ட டிவிட்டர் பதிவில்…

அரசின் இந்த தைரியமான செயலைப் பாராட்டுகிறோம். இந்தச் செயலானது ஜம்முகாஷ்மீருக்கு மட்டும் மிகத் தேவையான ஒன்று அல்ல, நாட்டுக்கே தேவையானது. இதனை அனைவரும் வரவேற்க வேண்டும். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், அரசியல் சச்சரவுகளைக் கடந்து, அனைவரும் இதற்கு தங்கள் ஆதரவைத் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

இது குறித்த டிவிட்டர் பதிவு:

இதே போல், ஸ்ரீ நரேந்த்ர மோதி சிந்தனை பேரவையின் (நரேந்த்ர மோதி விசார் மஞ்ச்) அகில பாரத பொதுச் செயலாளர் ராம்கோபாலரத்னம் மற்றும் தமிழக பொதுச் செயலாளர் ஸ்ரீ ஶங்கர்கோபால் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில்..

மோதியின் மத்திய அரசு இன்று ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் எடுத்த மிக முக்கியமான முடிவை நாம் வரவேற்கிறோம் . இத்தனை வருடங்களாக பெருமூச்சுக்கள், கண்ணீர்த்துளிகள், கனவு, ஆவேசமான பேச்சுக்கள், போராட்டங்கள், மூவர்ணக்கொடியை ஏற்றவும் போராட்டங்கள், விலை மதிக்க முடியாத நம் ராணுவ வீரர்களின் ரத்த வெள்ளம்  என நீண்ட போராட்டங்கள்…எல்லாவற்றுக்கும் விடை காண்பது போல்… இன்று இந்த முடிவு நம் அனைவரையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது!

ஆண்டுதோறும் 70,000 கோடி ரூபாய் கொடுத்தும் வளர்ச்சி காணாத காஷ்மீர் , தினம் தினம் காதைப் பிளக்கும் குண்டு வெடிப்பு , நெஞ்சைப் பிழியும் மரண ஓலங்கள் , கோடிகோடியில் பணத்தைக் குவித்து மக்களை ஏமாற்றி வந்த குடும்ப / வாரிசு அரசியல்வாதிகள் .. ஒரேயடியாக அனைத்தையும் மாற்றக் கூடிய ஒரு மகத்தான முடிவு .. நம் அனைவருக்கும் பெரு மகிழ்ச்சி!

370 சட்டத்தை நீக்கியதன் மூலம் பெண் உரிமை .. மகளிர் சமத்துவம் என்ற திசையில் மிக முக்கியமான முடிவு .. இந்தச் சட்டம் காஷ்மீரப் பெண்கள் தம் பெற்றோர் சொத்தில் பங்கு பெறுவதை மறுத்தது .. இன்று அவர்களது இந்த உரிமை மீட்கப் படுகிறது .. முத்தலாக் சட்டத்திற்குப் பின் இதுவும் பெண்-சமத்வத்திற்கு அடிகோலும் மகத்தான சட்டம்!

ஆஸேது – ஹிமாசலம் , ஹிமயம் முதல் குமரி வரை , காஷ்மீர் முதல் கன்யாகுமரி என்றெல்லாம் இந்நாள் வரை கவிதை பாடினோம்! ஆனால் காஷ்மீரம் பாரதத்துடன் இணையாமல் இருந்தது! இன்று பாரதம் ஒரு தேசம் என்ற சத்யத்தை ஆணித்தரமாக வலியுறுத்தும் ஒரு முடிவு இது! நம்மில் எவரும் காஷ்மீரில் வசிக்க முடியும் , வீடு வாங்க முடியும் , தொழில் நிறுவ முடியும் .. வியாபாரம் செய்ய முடியும் .. நமது அளப்பறியா ஆனந்தத்தை நாம் வெளிப்படுத்துகிறோம் !

இனி காஷ்மீரமும் வளர்ச்சி அடையும் .. வளர்ச்சியின் பலனான வளம் பொதுமக்களைச் சென்றடையும்!

கண்களில் கனவுடனும் மனதில் நிராசையும் ஏக்கமும் ஏந்தி வாழ்ந்த காஷ்மீர இளைஞர்களும் இனி பாரத தேசத்தின் வளர்ச்சியில் பங்களிக்க முடியும்!

முஸ்லிம் என்ற பெயரில் பிரித்து வைத்து நடந்து வந்த அரசியலும் இனி முடிந்து போகும்!  இதில் கொழித்த அரசியல்வாதிகளும் முடிந்து போவர் .. வாக்தேவி சரஸ்வதியின் காஷ்மீர் , பரமசிவனின் வசிப்பிடமான இமயமலை பள்ளத்தாக்கான காஷ்மீர் , காஶ்யப ரிஷியின் காஷ்மீர், ஆதி சங்கரன் கால் பட்ட காஷ்மீர் , பாரதத்தை உறுதியாக ஒருங்கிணைத்த சாணக்யன் பணி புரிந்த தட்சசீலம் உள்ள காஷ்மீர் ,.. தனது பழம் பெருமையை மீண்டும் பெற்றிடும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறோம்!

இந்த நேரத்தில் மோதி அரசாங்கம் இதைச்செய்யும் என்ற நம்பிக்கையுடன் இணைந்த எங்களது ஒரு விண்ணப்பமும் வைக்கிறோம் .. பாகிஸ்தானின் ஆக்ரமிப்பில் இருக்கும் காஷ்மீரப் பகுதியையும் பாரதத்துடன் இணைப்பதற்கான திட்டம் வரையப்பட வேண்டும் .. எங்களது ஆசை இது , எங்களது கனவு இது , எங்களது நம்பிக்கை இது , எங்களது கோரிக்கை இதுவே .. .என்று குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories