December 6, 2025, 12:21 PM
29 C
Chennai

திருமாவளவனுக்கு வழங்கப்பட்ட முனைவர் பட்டம்; எதிர்ப்பு தெரிவித்து ஏபிவிபி சட்ட போராட்டம்!

governor thirumavalavan - 2025

ஆக.22 நேற்று நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்பட பலர் முனைவர் பட்டம் பெற்றனர்.

இதில், திருமாவளவன் செய்த ஆய்வும், அப்போது உருட்டி மிரட்டி முறைகேடாக வைவா எனப்படும் நேர்முக ஆய்வில் மூடிய அறைக்குள் ஆய்வினை சமர்ப்பித்ததாகவும் கூறி புகார் தெரிவித்து வந்த அகில பாரத வித்யார்த்தி பரிஷத் மானவர் அமைப்பினர் தற்போது இதன் பேரில் சட்டப் போராட்டம் நடத்தப் போவதாகக் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக அகில பாரத வித்யார்த்தி பரிஷத் ஏபிவிபி., மாணவர் அமைப்பினர் வெளியிட்ட அறிக்கையில்…

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 22-08-2019 நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் மக்களவைத்தொகுதி உறுப்பினருமான தொல் திருமாவளவன் அவர்கள் முனைவர் பட்டம் பெற்றார்.

தொல் திருமாவளவனுக்கு முனைவர் பட்டம் வழங்க கூடாது அவர் மேற்கொண்ட ஆய்வில் உண்மைக்கு புறம்பான பல தகவல்களை இணைத்துள்ளார்! மேலும் பல்வேறு விதிமுறைகளை மீறி மோசடிகளை செய்து தான் இந்த பட்டம் பெறுகிறார் என ஏபிவிபி தேசிய மாணவர் அமைப்பு சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தோம்!

இதற்கிடையில் நேற்று 22-08-2019 திருமாவளவன் அவர்களுக்கு முனைவர் பட்டம் வழங்கபட்டது! இதனை ஏபிவிபி தேசிய மாணவர் அமைப்பு கடுமையாக எதிர்கிறது! என்ற தகவலையும் இது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள தயார் ஆகி வருகிறோம் தகவலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்திய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய மீனாட்சிபுரம் மத மாற்றம் நிகழ்வு குறித்த திருமாவளவன் ஆய்வை மறுஆய்வு செய்ய ஏபிவிபியைச் சேர்ந்த மாணவர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அந்த மாணவர் மூலம் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

மேலும் அவர் ஆய்விற்காக மேற்கொண்ட வழிமுறைகளை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தரவுகளைப் பெற்று அதன் பின் வழக்கு தொடர்ந்து திருமாவளவன் மேற்கொண்ட ஆய்வுக் கட்டுரையை ரத்து செய்யவும் அவருக்கு வழங்கப்பட்ட முனைவர் பட்டத்தை திரும்பப் பெறவும் சட்டத்தின் ரீதியாகவும் ஆய்வு ரீதியாகவும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

– இவ்வாறு ஏபிவிபி., நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories