திருமாவளவனுக்கு வழங்கப்பட்ட முனைவர் பட்டம்; எதிர்ப்பு தெரிவித்து ஏபிவிபி சட்ட போராட்டம்!

governor thirumavalavan - 2026

ஆக.22 நேற்று நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்பட பலர் முனைவர் பட்டம் பெற்றனர்.

இதில், திருமாவளவன் செய்த ஆய்வும், அப்போது உருட்டி மிரட்டி முறைகேடாக வைவா எனப்படும் நேர்முக ஆய்வில் மூடிய அறைக்குள் ஆய்வினை சமர்ப்பித்ததாகவும் கூறி புகார் தெரிவித்து வந்த அகில பாரத வித்யார்த்தி பரிஷத் மானவர் அமைப்பினர் தற்போது இதன் பேரில் சட்டப் போராட்டம் நடத்தப் போவதாகக் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக அகில பாரத வித்யார்த்தி பரிஷத் ஏபிவிபி., மாணவர் அமைப்பினர் வெளியிட்ட அறிக்கையில்…

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 22-08-2019 நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் மக்களவைத்தொகுதி உறுப்பினருமான தொல் திருமாவளவன் அவர்கள் முனைவர் பட்டம் பெற்றார்.

தொல் திருமாவளவனுக்கு முனைவர் பட்டம் வழங்க கூடாது அவர் மேற்கொண்ட ஆய்வில் உண்மைக்கு புறம்பான பல தகவல்களை இணைத்துள்ளார்! மேலும் பல்வேறு விதிமுறைகளை மீறி மோசடிகளை செய்து தான் இந்த பட்டம் பெறுகிறார் என ஏபிவிபி தேசிய மாணவர் அமைப்பு சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தோம்!

இதற்கிடையில் நேற்று 22-08-2019 திருமாவளவன் அவர்களுக்கு முனைவர் பட்டம் வழங்கபட்டது! இதனை ஏபிவிபி தேசிய மாணவர் அமைப்பு கடுமையாக எதிர்கிறது! என்ற தகவலையும் இது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள தயார் ஆகி வருகிறோம் தகவலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்திய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய மீனாட்சிபுரம் மத மாற்றம் நிகழ்வு குறித்த திருமாவளவன் ஆய்வை மறுஆய்வு செய்ய ஏபிவிபியைச் சேர்ந்த மாணவர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அந்த மாணவர் மூலம் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

மேலும் அவர் ஆய்விற்காக மேற்கொண்ட வழிமுறைகளை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தரவுகளைப் பெற்று அதன் பின் வழக்கு தொடர்ந்து திருமாவளவன் மேற்கொண்ட ஆய்வுக் கட்டுரையை ரத்து செய்யவும் அவருக்கு வழங்கப்பட்ட முனைவர் பட்டத்தை திரும்பப் பெறவும் சட்டத்தின் ரீதியாகவும் ஆய்வு ரீதியாகவும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

– இவ்வாறு ஏபிவிபி., நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories