அதிமுக.,வின் டிஜிட்டல் பேனர்.. . இரவோடு இரவாக அகற்றம்!

admk banner - 2026
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர் போர்டுகளை அதிமுக.,வினர் இரவோடு இரவாக அகற்றினர்.

டிஜிட்டல் பேனர்கள் குறித்த சர்ச்சை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்தது. சென்னை உயர் நீதிமன்றம் பேனர்கள் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கக் கூறியது.

இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக., பிரமுகர் இல்லத் திருமண நிகழ்ச்சிக்காகக் கட்டப் பட்டிருந்த பேனர் சாலையில் விழுந்து, அதனால் நிலை தடுமாறிக் கீழே விழுந்த இளம்பெண் சுபஸ்ரீ மீது தண்ணீர் லாரி ஏறியது. இந்த விபத்தில், சுபஸ்ரீ உயிரிழந்த சோகம் இன்னமும் மக்கள் மனத்தை விட்டு அகலாத நிலையில், நீதிமன்றம் மேலும் கடுமை காட்டியது.

அரசியல் கட்சியினர் தங்கள் தொண்டர்களுக்கு கட்டளை இட வேண்டும் என்றும், பேனர்கள் பிள்க்ஸ் பேனர்கள் வைப்பதற்கு தடை செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. இதை அடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக., தலைவர் ஸ்டாலின், பாமக., நிறுவுனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் அறிக்கைகளை வெளியிட்டனர்.

இந்த நிலையில், பல்வேறு இடங்களில் கட்சியினர் தாமாகவே முன்வந்து தாங்கள் வைத்த பேனர்களை அகற்றி வருகின்றனர்.

அந்த வகையில், நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர் போர்டுகளை அதிமுக.,வினர் இரவோடு இரவாக அகற்றினர்.

இது போல் புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் டிஜிட்டல் பேனர்களை அரசியல் கட்சியினர் அகற்றினர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட இடங்களில், கோயில் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு அனுமதியின்றி பேனர் வைத்ததாக 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்கப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories