அதிமுக.,வின் டிஜிட்டல் பேனர்.. . இரவோடு இரவாக அகற்றம்!

admk banner - 2026
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர் போர்டுகளை அதிமுக.,வினர் இரவோடு இரவாக அகற்றினர்.

டிஜிட்டல் பேனர்கள் குறித்த சர்ச்சை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்தது. சென்னை உயர் நீதிமன்றம் பேனர்கள் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கக் கூறியது.

இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக., பிரமுகர் இல்லத் திருமண நிகழ்ச்சிக்காகக் கட்டப் பட்டிருந்த பேனர் சாலையில் விழுந்து, அதனால் நிலை தடுமாறிக் கீழே விழுந்த இளம்பெண் சுபஸ்ரீ மீது தண்ணீர் லாரி ஏறியது. இந்த விபத்தில், சுபஸ்ரீ உயிரிழந்த சோகம் இன்னமும் மக்கள் மனத்தை விட்டு அகலாத நிலையில், நீதிமன்றம் மேலும் கடுமை காட்டியது.

அரசியல் கட்சியினர் தங்கள் தொண்டர்களுக்கு கட்டளை இட வேண்டும் என்றும், பேனர்கள் பிள்க்ஸ் பேனர்கள் வைப்பதற்கு தடை செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. இதை அடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக., தலைவர் ஸ்டாலின், பாமக., நிறுவுனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் அறிக்கைகளை வெளியிட்டனர்.

ALSO READ:  மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இந்த நிலையில், பல்வேறு இடங்களில் கட்சியினர் தாமாகவே முன்வந்து தாங்கள் வைத்த பேனர்களை அகற்றி வருகின்றனர்.

அந்த வகையில், நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர் போர்டுகளை அதிமுக.,வினர் இரவோடு இரவாக அகற்றினர்.

இது போல் புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் டிஜிட்டல் பேனர்களை அரசியல் கட்சியினர் அகற்றினர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட இடங்களில், கோயில் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு அனுமதியின்றி பேனர் வைத்ததாக 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்கப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories