December 6, 2025, 1:21 AM
26 C
Chennai

அதிமுக.,வின் டிஜிட்டல் பேனர்.. . இரவோடு இரவாக அகற்றம்!

admk banner - 2025
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர் போர்டுகளை அதிமுக.,வினர் இரவோடு இரவாக அகற்றினர்.

டிஜிட்டல் பேனர்கள் குறித்த சர்ச்சை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்தது. சென்னை உயர் நீதிமன்றம் பேனர்கள் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கக் கூறியது.

இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக., பிரமுகர் இல்லத் திருமண நிகழ்ச்சிக்காகக் கட்டப் பட்டிருந்த பேனர் சாலையில் விழுந்து, அதனால் நிலை தடுமாறிக் கீழே விழுந்த இளம்பெண் சுபஸ்ரீ மீது தண்ணீர் லாரி ஏறியது. இந்த விபத்தில், சுபஸ்ரீ உயிரிழந்த சோகம் இன்னமும் மக்கள் மனத்தை விட்டு அகலாத நிலையில், நீதிமன்றம் மேலும் கடுமை காட்டியது.

அரசியல் கட்சியினர் தங்கள் தொண்டர்களுக்கு கட்டளை இட வேண்டும் என்றும், பேனர்கள் பிள்க்ஸ் பேனர்கள் வைப்பதற்கு தடை செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. இதை அடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக., தலைவர் ஸ்டாலின், பாமக., நிறுவுனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் அறிக்கைகளை வெளியிட்டனர்.

இந்த நிலையில், பல்வேறு இடங்களில் கட்சியினர் தாமாகவே முன்வந்து தாங்கள் வைத்த பேனர்களை அகற்றி வருகின்றனர்.

அந்த வகையில், நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர் போர்டுகளை அதிமுக.,வினர் இரவோடு இரவாக அகற்றினர்.

இது போல் புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் டிஜிட்டல் பேனர்களை அரசியல் கட்சியினர் அகற்றினர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட இடங்களில், கோயில் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு அனுமதியின்றி பேனர் வைத்ததாக 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்கப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories