நெல்லையில்அதிரடி சோதனை போலி மருத்துவம் செய்த இருவர் கைது

Published:

நெல்லை மாவட்டம் தென்காசியில் நவீன வயக்ரா மருந்து சாப்பிட்டு 4பேர் உயிர் இழந்தனர் இதையடுத்து நெல்லை மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது

அண்மையில் தென்காசி அருகே அழகப்பப்புரத்தில் நீரிழிவு நோய்க்காக நாட்டு மருந்து சாப்பிட்டதாக 4 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
மேலும் அம்மருந்து இளம் வாலிபர்களை குறிவைத்து தயாரிக்கபட்ட நவீன வய்க்ரா எனக் கூறப்படுகிறது
போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் மாணிக்கத்தாய் தலைமையில் டாக்டர்கள் கலா, சண்முசுந்தரம், துரைராஜ், துரைப்பாண்டியன், அரிகரன் ஆகியோர் கொண்ட குழுவினர் பாவூர்சத்திரத்தில் சித்த மருத்துவம் செய்து வந்த இடங்களில் அதிரடி சோதனை நடதினர் இதில் பாவூர் சத்திரத்தில் சித்தமருத்துவம் செய்து வந்தத குறும்பலாப்பேரி செல்வராஜ் மகன் பிரபுவை (35) மற்றும் எவ்வித அனுமதி பொறாமல் சித்தா மருத்துகள் விற்பனை செய்துவந்த திருமலாபுரம் அண்ணாத்துரை மகன் கதிரேசன் (32) இருவரையும் கைது செய்து பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

இதுகுறித்து மாவட்ட சித்த மருத்தவ அதிகாரி மாணிக்கத்தாய் செய்தியளர்களிடம் கூறியதாவது
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி சித்த மருத்துவம் மற்றும் நாட்டு வைத்தியம், செய்து வருபவர்களின் உண்மைத்தன்மை கண்டறியப்பட்டு வருகிறது இதில் பாவூர்சத்திரத்தில் உள்ள நாட்டு மருந்து கடையில் எந்த வித அனுமதி பொறாமல் மருத்துகள் விற்பனை செய்து வந்ததை கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் சுரண்டை ரோட்டில் ஒருவர் முறையாக படிக்காமல் போலி சான்றிதழ்களுடன் சித்தமருத்துவம் செய்து வந்தது குறித்து கண்டுபிடித்தோம். அங்கு காலாவதியான மருந்துகளும் இருந்தன. அத்தோடு சொந்தமாக மருந்துகள் தயார்செய்ததும் தெரியவந்தது. மருத்துவம் சார்ந்த எந்த கல்வியும் கற்கவில்லை அவரிடம் உள்ள சான்றிதழ்களும் போலியானவை என தெரியவந்த்து . இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பித்தோம். அவர் உத்தரவின் பேரில் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்
பாவூர்சத்திரம் காவல் துறையினர் திருமலாபுரம் அண்ணாத்துரை மகன் கதிரேசன் (32) மற்றும் இரண்டு பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img