சென்னை: 66ஏ சட்டப்பிரிவுக்கு தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் சர்ச்சைக்குரிய பிரிவான 66ஏ பிரிவுக்கு ஒட்டுமொத்த அமைச்சரவையுமே பொறுப்பு என்றும், தன்னை மட்டுமே பொறுப்பாக்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். அண்மையில், இந்த தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66ஏ பிரிவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்தச் சட்டம் குறித்து பேசிய முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சர் பரத்வாஜ், முன்னாள் மத்தியத் தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாதான் இந்தப் பிரிவை உருவாக்கியவர் என்று கூறியதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து, இது தொடர்பாக விளக்கமளித்திருக்கும் ஆ.ராசா, இது போன்ற சட்டங்கள் உருவாகும்போது, அதனை ஒட்டுமொத்த அமைச்சரவையின் முடிவாகத்தான் கருத வேண்டுமே தவிர, தனிப்பட்ட ஒருவர் மீது பழி சொல்வது ஜனநாயக நெறிமுறைகளுக்கு ஏற்றதல்ல; அனைத்து ஆய்வு நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்பட்ட பிறகுதான் இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேறியது என்று கூறியுள்ளார் ஆ.ராசா. இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், எந்த ஒரு சட்டமும் அப்போதைய காலகட்ட அவசியம் கருதி இயற்றப்படுவதும் பிறகு திருத்தம் கொண்டுவருவதும், ரத்து செய்யப்படுவதும் கடந்த காலத்திலும் நடந்திருக்கின்றன என்று கூறியுள்ளார்.
66ஏ சட்டப் பிரிவு: நான் மட்டுமே பொறுப்பு அல்ல என்கிறார் ஆ.ராசா
Popular Categories


