கனமழை… தத்தளிக்கும் சென்னை! பொதுமக்கள் கடும் அவதி!

Tamil Nadu rains - 2026

சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டி வரும் நிலையில் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் தேங்கி நிற்பதால் போக்குவரத்து கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.

மழை தொடர்வதாலும், சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதாலும் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப பெற்றோர்கள் கடும் அவதியடைந்தனர்.

கனமழை காரணமாக, வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் பல மணி நேரமாக வாகனங்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் சாலைகளில் இயல்பான போக்குவரத்து இன்றி, கடும் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப் பட்டு வருகின்றனர்.

சென்னை நகர்ப் பகுதியில் கனமழை காரணமாக, ’வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. வடசென்னை பகுதிகளான திருவேற்காடு, அயனம்பாக்கம் பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ள நீரால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை புறநகர்ப் பகுதியான வானகரம் பகுதியில் இதனால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், கிண்டி, வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர், கந்தன்சாவடி, ஆவடி, திருமுல்லைவாயில், அம்பத்தூர், பாடி உள்ளிட்ட இடங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!
rain 1 - 2026

சென்னை மட்டுமின்றி, வடகிழக்குப் பருவமழை தொடங்கியதன் அறிகுறியாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை, காஞ்சிபுரம், திருச்சி, சிவகங்கை, கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை மாவட்டத்தில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார். பள்ளிகள் இயங்கும் என்ற ஆட்சியரின் முடிவு சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியரின் பள்ளிகள் இயங்கும் என்ற அறிவிப்பிற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories