விமர்சனம்: கைதி – KAITHI – காவலன் …!

KK - 2026

கைதி – KAITHI – காவலன் …

முதல் படத்திலேயே முத்திரை பதித்த இளம் இயக்குனர்கள் அடுத்த படங்களில் பெரிய ஹீரோக்களுடன் வேலை பாடர்க்கும் போது நிறைய காம்ப்ரமைஸ் செய்து கொண்டு தங்களது தனித்திறமையை இழந்து விடுவார்கள் .

அப்படி மாஸ் ஹீரோவிடம் முழுவதுமாக சரண்டர் ஆகாமல் தங்களது தனித்துவத்துடன் வெற்றிப்பயணத்தை தொடரும் சில இயக்குனர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் மாநகரம் இயக்குனர் லோகேஷ்கனகராஜ் . ( அடுத்த படத்தில் விஜய்யுடன் இதே பயணத்தை தொடர முடியுமா என்பது சந்தேகமே! ) …

KK - 2026

பொது மக்களை காப்பாற்றும் காவலர்களை போதை மருந்து கடத்தல் கும்பலிடமிருந்து  ஒரு கைதி காப்பற்றுவதே கதை . 

பத்து வருட தண்டனைக்கு பிறகு தனது மகளை பார்க்க பரோலில் வெளியே வரும் டில்லி ( கார்த்தி ) , பல நூறு கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை மடக்கியிருக்கும் பிஜாய் & கோ ( நரேன் ) வையும் , போலீஸ்காரர் நெப்போலியன் ( மரியான் ) உதவியுடன் கமிசனர்  ஆஃபீசில் அடைபட்டிருக்கும் மாணவர் களையும்  அடைக்கலராஜின் ( ஹரிஷ் உத்தமன் ) மாஃபியா கேங்கிடமிருந்து எப்படி காப்பாற்றுகிறார் என்பதை முதல் பாதி த்ரில்லிங் திரைக்கதையாலும் , இரண்டாம் பாதி  ஹீரோயிச ஆக்ஸன்களாலும் விறுவிறுவென சொல்லி முடிக்கிறது படம் …

சாக்லேட் பாய் கேரக்டரில் நடித்த தேவ் அட்டர் ஃப்ளாப்பான பிறகு ரஃப் & டஃ ப் பருத்திவீரன் ரூட்டுக்கு திரும்பி யிருக்கும் கார்த்தி க்கு இந்த படம் கை கொடுத்திருக்கிறது .

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

சிறிய  தாமதத்திற்கு பிறகு அறிமுகமானாலும் வந்ததிலிருந்து  கவனம் முழுவதையும் தன் மேல் திரும்ப வைக்கிறார் . ஐஜி வீட்டில் நடக்கும் அமளிதுமளியை கண்டுகொள்ளாமல் வாளி  பிரியாணியை முழுங்குவது , ” பத்து வருஷம் உள்ள இருந்தேன்னு தெரியும் ஆனா என்ன பண்ணிட்டு உள்ள போனேன்னு தெரியாதுல்ல சார் ” என்று நரேனை பார்த்து சொல்வது , ஒரே டேக்கில் தனது தனது ஃப்ளாஸ்பேக்கை சொல்லி முடிப்பது , தன் மகளை பார்த்தவுடன் மருகுவது என கார்த்தி பல நடிகர்கள் இருந்தாலும் படம் முழுவதும் வியாபித்திருக்கிறார் …

KAITHI - 2026

முகமூடி க்கு பிறகு நரேனுக்கு நல்ல ரோல் . கையருந்த நிலையில் கைதியின் உதவியுடன் சக காவலர்களை காப்பாற்றும் போலீஸ் அதிகாரியாக பெர் ஃபெக்டராக இருக்கிறது அவர் நடிப்பு

 ரமணா இத்தனை வருடங்கள்  அப்படியே இருப்பது ஆச்சர்யம் , கார்த்தியோடு ஒரு ஃபைட் வைத்து அவர் கதையை முடித்து விடுகிறார்கள் . ஐயா ஐயா என்று ஃபோனில் விறைப்பாக பேசும் மரியான்  நடிப்பால் நிமிர வைக்கிறார் .

சிறையில் இருக்கும் மெயின் வில்லன் ஹரிஷ் உத்தமனை கடைசி வரை கத்துவது தவிர எதுவும் செய்ய விடாமல் வீணடித்திருக்கிறார்கள் . போலீஸ் கருப்பாடாக வரும் டிப்ஸ் கடைசியில் முதுகில் குத்தப்பட்டு இறப்பது நல்ல முடிவு …

ALSO READ:  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

படத்தில் ஹீரோயின் இல்லை , சாங்க்ஸ் இல்லை , தனி காமெடி டிராக் இல்லை , குறிப்பாக ஆக்ஸன் படத்தில் மாஸ் ஹீரோ பேசும் பன்ச் டயலாக் இல்லை இப்படி நிறைய இல்லைகள் இருந்தும் அதை தொல்லையில்லாத க்ரிப்பான திரைக்கதையால் கட்டிப்போடுகிறார் இயக்குனர் .

முதல் 15 நிமிடங்களுக்குள் எல்லா மெயின் கேரக்டர்களையும் படத்திற்கான  ப்ளாட்டையும் அறிமுகம் செய்து ஹீரோவின் வருகைக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஆரம்பத்திலேயே அதகளத்துடன் ஆரம்பிக்கும் படம் இண்டெர்வெல் வரை ஒன் வேயில் டாப் கியரில் பறக்கிறது .

சாவதற்கு முன் ஸ்டூடெண்ட்டுக்குள் நடக்கும் காதல் ஸ்வீட்  ஹைக்கூ . 

சாம் எஸ்ஸின் பின்னணி இசை , சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு , பிலோமின் ராஜின் எடிட்டிங் எல்லாமே படத்துக்கு பக்க பலம் .

லாரி சேஸிங் ஸ்டண்ட் காட்சிகளை திறம்பட எடுத்திருக்கிறார்கள் . அதுவும் நெற்றியில் பட்டையை அடித்துக்கொண்டு எதிரிகளை அடித்து பட்டையை கிளப்பும் கார்த்தி தனி அழகு …

ப்ளாஷ்பேக்கில் நேரத்தை வீணடிக்கா விட்டாலும் ” நான் என்ன செஞ்சுட்டு உள்ள போனேன்னு தெரியுமா ” என்று ஒரு பில்டப் கொடுத்ததால்  ஏற்படும் எதிர்பார்ப்பு கார்த்தி ஒரே டேக்கில் தன்  கதையை சொல்லி முடிக்கும் போது சப்பென்று ஆகி விடுகிறது .

அத்தனை பெரிய கமிஷனர் ஆஃபீஸில் கத்தி அரிவாளுடன் தாக்க வரும் கும்பலை சமாளிக்க ஒரு துப்பாக்கி கூட இல்லாமலிருப்பது , ரூட்டை மாற்றிப் போனாலும் சரியாக அந்த இடத்துக்கு கும்பல் வந்துவிடுகிறதே என்பதை நரேன் யோசிக்காமலேயே இருப்பது , போலீஸ் உளவாளி சீன்கள் குருதிப்புனலை நியாபகப்படுத்துவது ,கத்திக்குத்து , கல்லடி எல்லாம் வாங்கி குற்றுயிரும் , கொலையுயிருமாக இருக்கும் கார்த்தி மகளுக்கு வாங்கிய ஜிமிக்கியை ரமணா மிதித்தவுடன் பொங்கியெழுந்து பத்து நிமிடம் சண்டை போடுவதெல்லாம் தரமான படத்துக்கு வைக்கப்பட்ட  திருஷ்டிப்பொட்டு .

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

பலகோடி பட்ஜெட் , பெரிய விளம்பரம் எல்லாம் செய்து கதையை நம்பாமல் வெறும் ஹீரோவின் மார்க்கெட்டை மட்டும் நம்பி எடுக்கப்படும் படங்களுக்கு மத்தியில் நல்ல கதை , திரைக்கதையோடு மாஸ் ஹீரோவையும் இயக்குனர் கச்சிதமாக பயன்படுத்தியிருக்கும் விதத்தில் இந்த கைதி ரசிகர்களுக்கும் , தயாரிப்பாளருக்கும் ஒரு நல்ல காவலன் …

ரேட்டிங் : 3.5 * / 5 *
ஸ்கோர் கார்ட் : 45

  • அனந்து (http://pesalamblogalam.blogspot.com)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories