முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி மீது சிபிஐ விசாரணை தொடக்கம்!

VK tahilramani madras hc2 - 2026

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி மீது சிபிஐ விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தார் தஹில் ரமானி! இவர், அண்மையில் மேகாலயா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

ஆனால் இடமாற்ற உத்தரவை ஏற்க மறுத்த தஹில் ரமானி, தனது இடமாற்றத்தை மறு பரிசீலனை செய்யக்கோரி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது கோரிக்கை, நிராகரிக்கப்பட்டது.

இதனால் தாம் மேகாலயா சென்று பணியாற்ற முடியாது என்று கூறி, தன் பதவியை தஹில் ரமானி ராஜினாமா செய்தார்.

இதனிடையே தஹில் ரமானி சென்னை புறநகர் பகுதியில் முறைகேடான வகையில் ரூ. 3.18 கோடி அளவுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் இரண்டு வீடுகள் வாங்கி இருப்பதாக மத்திய உளவு அமைப்பான ஐ.பி., குற்றம் சாட்டியது.

VK tahilramani madras hc2 - 2026

மேலும் சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்றத்தை தஹில் ரமானி கலைத்து உத்தரவிட்டதில் உள்நோக்கம் உள்ளது என்றும், அவரை தமிழக அமைச்சர் ஒருவர் அடிக்கடி சந்தித்தது குறித்தும் குறிப்பிட்டு, இதன் அடிப்படையில் தான் தவறு நடந்துள்ளது’ என ஐந்து பக்க அறிக்கையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புலனாய்வு அமைப்பு அனுப்பியது.

இந்நிலையில், தஹில் ரமானி மீதான குற்றச்சாட்டைசி.பி.ஐ., அதிகாரிகள் விசாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டார்.

இதை அடுத்து சி.பி.ஐ., அதிகாரிகள் தஹில் ரமானியிடம் விசாரணையை துவக்கி அவர் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

குற்றம் நடந்து இருப்பது உறுதி செய்யப்பட்டால் தஹில் ரமானி கைது செய்யப்படலாம் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories