பன்னீர்செல்வத்தை ஆதரிக்க தயார் : துரை.முருகன்

*பன்னீரை ஆதரிக்க தயார்: துரைமுருகன்*
வியாழன், 2 பிப் 2017
சட்டசபையின் நேற்றைய கூட்டத்தில் முதல்வர் பன்னீர்செல்வத்தை திமுக மூத்த தலைவர் துரைமுருகன் பாராட்டிப் பேசினார்.
நடப்பாண்டின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த 23ஆம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து சபை நடவடிக்கைகளில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கவர்னர் உரைக்கு பதில் தெரிவித்து, உறுப்பினர்கள் பேசும்போது, அவர்களது கேள்விக்கு அமைச்சர்கள் பதில் தெரிவித்தனர். இந்நிலையில், சட்டசபை கூட்டம் நேற்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவையில் இருக்கும்போது, ஆளும் கட்சி உறுப்பினர்களும், எதிர் கட்சி உறுப்பினர்களும் நேருக்கு நேராக சந்திக்கும் வாய்ப்பு வந்தால்கூட பெரும்பாலும் அதை தவிர்த்து விடுவார்கள். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியல் வரலாற்றில் எதிர்பாராத திருப்பமாக வடமாநில அரசியல் சம்பவங்கள்போல், அரசியல் கலாச்சாரம் மாறி வருகிறது. இது ஒரு நல்ல ஆரோக்கிய அரசியலுக்கு அடையாளமாக உள்ளது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற சட்டசபையின் இறுதிக்கூட்டத்தில், முதல்வர் ஓ.பி.எஸ்-க்கு ஆதரவளிப்பது போல் துரைமுருகன் பாராட்டிப் பேசினார். அதன் விபரம் இதோ…
"நன்றாக பாராட்டுகிறோம்…
நீங்களே தொடர்ந்து முதலமைச்சராக இருக்க பாராட்டுகிறோம்…
5 ஆண்டுகளும் நீங்களே முதல்வராக இருக்க பாராட்டுகிறோம்…
அதற்கான சக்திகளை நாங்கள் தருகிறோம்…
அதற்கு எதிராக உங்கள் பின்னால் இருப்பவர்கள் போகாமல் பார்த்து கொள்ளுங்கள்..
மனப்பூர்வமாக பாராட்டுகிறோம்…"
என்று சிலேடையாகக் கூறினார்.
தமிழக சட்டசபையில் ஆளும் கட்சியினர், தங்களுக்குப் பிடிக்காத பேச்சுகளை அவைக்குறிப்புகளில் இருந்து நீக்கிவிடுவது வழக்கம். இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்களை முகம் சுளிக்க வைத்த
 துரைமுருகனின் இந்த பேச்சு அவைக்குறிப்பில் இருந்து இன்னும் நீக்கப்படாதது ஆச்சர்யத்தை அளிக்கிறது.
ALSO READ:  சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories