ஸ்டாலின் மனு தள்ளுபடி

*ஸ்டாலின் மனு தள்ளுபடி!*
வியாழன், 2 பிப் 2017
ஜல்லிக்கட்டு வன்முறை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிபிஐ, என்ஐஏ அதிகாரிகள் அடங்கிய சிறப்புப் புலனாய்வு குழு அமைக்கக்கோரி திமுக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக திமுக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த பொது நல மனுவின் விவரம் வருமாறு:
சென்னை மாநகரில் ஜல்லிக்கட்டு போராட்டத்தைத் தொடர்ந்து, கடந்த மாதம் 23, 24 ஆகிய இரு நாள்களில் வன்முறை நடந்தது. இது குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், தேசிய புலனாய்வு அமைப்பு, சிபிஐ, பிற மத்திய புலனாய்வு அமைப்புகளை சேர்ந்த அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் ஆகியோர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும்.
மேலும் வன்முறைக்கு காரணமான காவல்துறை அதிகாரிகளை இடை நீக்கம் செய்து, வன்முறையால் ஏற்பட்ட பாதிப்பை மதிப்பிட்டு இழப்பீட்டை நிர்ணயிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர் இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதற்கான அரசாணையை தாக்கல் செய்தார்.
ஜல்லிக்கட்டு விசாரணை ஆணையத் தலைவராக எஸ்.ராஜேஷ்வரன் நியமனம்!
அப்போது மனுதாரர் தரப்பு மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் முன் வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், வன்முறை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுவை அரசு ஏற்கனவே அமைத்துள்ளது. மேலும் தவறிழைத்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். எனவே, தற்போதைய சூழலில் இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல. மனுதாரர் தன்னிடம் உள்ள வீடியோ உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் விசாரணை குழுவிடம் வழங்கலாம் என்றனர். இதையடுத்து மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறியதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

Topics

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Entertainment News

Popular Categories