December 6, 2025, 4:57 AM
24.9 C
Chennai

இலவச கல்வி திட்டத்தில் அரசு ரூ.300 கோடி பாக்கி : மாணவர்களை சேர்க்க தனியார் பள்ளிகள் மறுப்பு

சென்னை- தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டிய ரூ. 300 கோடியை வழங்கினால்தான், இந்த கல்வி ஆண்டில் இலவச கல்விக்கான மாணவர்களை சேர்ப்போம் என்று தனியார் பள்ளிகள் தெரிவித்துள்ளன.
கடந்த 2009ம் ஆண்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதில் இடம் பெற்றுள்ள பல்வேறு அம்சங்களில்,சமூகத்தில் நலிந்த இயலாத பிரிவு மற்றும் ஆதரவற்ற பிரிவில் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி வழங்கப்பட வேண்டும்.

அதற்கான செலவை மாநில அரசு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த சட்டத்தின் கீழ் அந்தந்த மாநில அரசுகள் அரசாணைகள் பிறப்பித்தன.

தமிழகத்தில் 2011ம் ஆண்டு முதல் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன்படி தனியார் பள்ளிகள் நடத்துவோர், தங்கள் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவ மாணவியரை சேர்க்கும் போது, அதில் 25 சதவீதம் இடங்கள், நலிந்த பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கி இலவச கல்வி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அரசாணை நடைமுறைக்கு வந்த பிறகு, தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் நலிந்த பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. அதற்கான நிதியை தமிழக அரசு வழங்கவில்லை என்று தனியார் பள்ளிகள் குற்றம்சாட்டி வந்தன.

இதையடுத்து கடந்த 2014-2015ம் ஆண்டு வரை உள்ள பாக்கியை அரசு வழங்கியது. 2015-2016ம் ஆண்டு 25 சதவீத அடிப்படையில் தமிழகம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் குழந்தைகள் சேர்க்கப்பட்டனர்.
அந்த ஆண்டுக்கான செலவுத் தொகை ரூ. 125 கோடி, 2016-2017ம் ஆண்டும் அதே அளவு குழந்தைகள் சேர்க்கப்பட்டனர்.

அதற்கு ரூ. 125 கோடி என மொத்தம் ரூ. 250 கோடி அரசு தரப்பில் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டியுள்ளது.

பாக்கியுள்ள தொகையை அரசு வழங்கினால் தான் இந்த ஆண்டில் 25 சதவீதத்தின் கீழ் குழந்தைகளை சேர்ப்போம். இல்லை என்றால் சேர்க்கமாட்டோம் என்று தனியார் பள்ளிகள் தெரிவித்துள்ளன.
இது குறித்து, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம் தரப்பில் கூறப்படுவதாவது: கடந்த 2015-2016ம் ஆண்டுக்கான செலவுத் தொகை ரூ. 125 கோடியை வழங்க சட்டப் பேரவையில் அறிவித்தனர். அதனால் அந்த தொகை விரைவில் வழங்கப்படும்.
மற்ற ஆண்டுக்கான தொகையும் அரசு விரைவில் வழங்க ஏற்பாடு செய்து வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories