அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக
அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா
தேர்வு செய்யப்பட்டதையடுத்து பாவூர்சத்திரத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து,இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன்
எம்.பி. தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க மண்டல முன்னாள் தலைவர் இளஅரசு, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை
மாவட்ட செயலாளர் மு.சேர்மபாண்டி, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராமசாமி,
கீழப்பாவூர் பேரூர் கழக செயலாளர் பாஸ்கர் ,சரண் டைல்ஸ் சரவணன், மேலவைப் பிரதிநிதிகள் கணபதி, ஜெயராமன், மற்றும் ரவிச்சந்திரன், ராமசாமி, ஜெயராஜ், சுப்பிரமணியன்,சுடலைமணி, ராசையா, முத்துசாமி உட்பட ஏராளமான திரளான
அதிமுகவினர் கலந்துகொண்டனர்



