ஆளுநரை மிரட்டிய சசிகலா: ஓரளவுக்குதான் பொறுமை காக்க முடியுமாம்!

Published:

சென்னை:
‛ஆளுநர் காலம் தாழ்த்துவது கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கையோ என சந்தேகிக்கத் தோன்றுகிறது’ என ஆளுநரை குறை கூறிய சசிகலா, ஓரளவுக்கு மேல்தான் தங்களால் பொறுமைகாக்க முடியும் என்றும் கூறினார்.
கூவத்தூரில் இருந்து போயஸ் கார்டன் திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” எம்.எல்.ஏ.,க்கள் எல்லோரையும் சந்தித்தேன். அவர்கள் மன உறுதியுடன் உள்ளனர். குடும்ப உறுப்பினர்களை சந்தித்த திருப்தி கிடைத்தது. இன்று (பிப்.,11) வரை பொறுமை காத்தோம். நாளை முதல் எங்கள் போராட்டம்  வேறு விதமாக இருக்கும். ஆளுநர் காலம் தாழ்த்துவது கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கையோ என சந்தேகிக்க தோன்றுகிறது.” என்று கூறினார்.

ஜனநாயகத்துடன் நம்பிக்கையுடன் இருப்பதால் கொஞ்சம் அமைதி காக்கிறோம். ஓரளவுக்கு மேல்தான் நாம் பொறுமையைக் கையாள முடியும். அதற்கு மேல் நாம் ஒன்று சேர்ந்து நாம் செய்ய வேண்டியதைச் செய்வோம் என்று அவர் கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

இந்நிலையில், ரவுடிகள் பலர் சென்னையில் பல இடங்களில் தங்கியிருப்பதாகவும், போலீஸார் அதுகுறித்து விவரங்கள் சேகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அவரது பேட்டியில் ஒரு பகுதி…

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img