சென்னையில் சொகுசு கார் எரிந்து தம்பதி பலி: தொழில் போட்டி காரணமா என விசாரணை

சென்னை: பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய சொகுசு கார் தீப்பற்றியதன் பின்னணியில் தொழில் போட்டி அல்லது முன்விரோதம் இருக்கலாமோ என்று சந்தேகிக்கப்படுகிறது
சென்னை பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகர் அருகே வேகமாக வந்த சொகுசு கார் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தரும், அவரது மனைவி நிவேதாவும் மரணமடைந்தனர்.
2 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்ற அஸ்வின் சுந்தருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி திருமணம் ஆனது. தொழில் முறை கார் பந்தய வீரரான அஸ்வின் நேற்றிரவு இரவு உணவுக்காக சொகுசு காரான பிஎம்டபியூ காரில் தன் மனைவியுடன் சென்றார்.
அப்போது எம்.ஆர்.சி.நகர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் தீப்பிடித்து எரிந்தது. 3 மணி நேரமாக கார் முழுவதும் எரிந்ததில் அஸ்வினும் அவரது மனைவியும் இறந்தனர்.
இந்த சம்பவம் அனைவரையும் பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு பின்னணியில் என்ன உள்ளது. கார் ரேசரான அஸ்வினுக்கு தறிகெட்டு ஓடும் காரை கட்டுப்படுத்த தெரியாதா என்ன?
மேலும் அவரது மனைவி கடந்த ஆண்டுதான் மருத்துவப் படிப்பில் பட்டம் பெற்றார். இந்நிலையில் மருத்துவம் பயின்ற அவருக்கு தன்னையும், தன் கணவரையும் காப்பாற்றிக் கொள்ள தெரியாதா? இல்லை முயன்றிருக்க மாட்டாரா?
லாரி, பஸ், கார் என எதுவாக இருந்தாலும் விபத்து ஏற்படும் போது அனுபவம் வாய்ந்த டிரைவர்கள் தப்பும் போது மிகவும் தாறுமாறாக ஓடும் ரேஸ் கார்கள் ஓட்டி அதில் சாம்பியன் பட்டம் பெற்ற அஸ்வின் அத்தகைய முயற்சியை எடுக்காமலா இருந்திருப்பார்.
அஸ்வின் சுந்தர் பயணித்த காரானது பிஎம்டபிள்யூ இசட் 4 வகையாகும். இதன் விலை சுமார் ரூ.78 லட்சமாகும். இருவர் மட்டுமே பயணிக்க முடியும் (2 சீட்) இந்த காரில் 4 ஏர்பேக்குகள் உள்ளன. கார் தீப்பிடிக்காமல் இருப்பதற்காக இவை பயன்படுத்தப்படுகின்றன. கார் எதனுடனாவது மோதியதும் இந்த ஏர் பேக்குகள் விரிந்து கார் ஸ்டியரிங்கும் , டிரைவர் சீட்டுக்கு அருகில் அமர்ந்திருப்பவரும் முன்னோக்கி செல்லாமலும், கார் எரியாமலும் பார்த்துக் கொள்ளும்.
பிஎம்டபிள்யூ கார்களில் டீபால்டாகவே இந்த ஏர்பேக்குகள் வருகின்றன. இதன் மதிப்பே லட்சங்களாகும். இந்நிலையில் அஸ்வினுக்கு குடிபழக்கம் இல்லை என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இதனால் காரை தாறுமாறாக ஓட்டியதற்கும் வாய்ப்பில்லை.
கார் நிச்சயம் தானாக தீப்பிடித்ததற்கான வாய்ப்பு இல்லை என்கிறார்கள். 2 முறை சாம்பியன் பட்டம் பெற்ற அஸ்வினுக்கு ஏதேனும தொழில் போட்டி இருந்திருக்குமா? அல்லது அவருக்கோ அவரது மனைவிக்கோ விரோதிகள் யாரேனும் இருந்திருக்கலாமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை தொடங்கியது.
ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories