சென்னை கன்டெய்னரில் இருப்பது என்ன? : பணமா ஆயுதமா? பரபரப்பு

சென்னை: சென்னை துறைமுகத்தில், நான்கு கன்டெய்னர்களில் வருவாய் புலனாய்வு துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அந்த கன்டெய்னர்களில் இருப்பது, ‛ஹவாலா' பணமா, கள்ள நோட்டுகளா, தடை செய்யப்பட்ட ஆயுத பொருட்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.சென்னை துறைமுகத்தில், ஜீரோ கேட் மூலமே, வாகனங்கள் உள்ளே சென்று வர முடியும். இந்த கேட், நேற்று மாலை முதல் மூடப்பட்டு விட்டது. இதனால் சரக்கு கன்டெய்னர்கள் ஏற்றிய லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து கேட்ட போது தான் வருவாய் புலனாய்வு துறையினர் நடத்தி வரும் சோதனை குறித்து தகவல் கிடைத்தது.
*நான்கு கன்டெய்னர்கள்*
துறைமுகம் உள்ளே, நான்கு கன்டெய்னர்கள் மீது, அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவற்றை தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். அந்த கன்டெய்னர்களில், கள்ள நோட்டுகள் இருக்கலாம் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது. 
இத்துடன், ‛ஹவாலா' பணமாக கூட இருக்க கூடும், தடை செய்யப்பட்ட ஆயுத பொருட்களும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சென்னை துறை முகத்தை சுற்றி, 32 இடங்களில், சரக்கு பெட்டக நிலையங்கள் உள்ளன. இங்கு தான் கன்டெய்னர்கள் வைக்கப்பட்டு இருக்கும். அந்த இடங்களிலும் தீவிர சோதனை நடந்து வருகிறது. மார்ச் 1ம் தேதிக்குப் பிறகு சென்னைக்கு வந்துள்ள கன்டெய்னர்களில் தான் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
*ஆர்.கே.நகர் தொகுதி*
இடைத்தேர்தல் நடக்க உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில், விம்கோ நகர் என்ற பகுதி உள்ளது. இங்கும் ஒரு சரக்கு பெட்டக நிலையம் உள்ளது. அங்குள்ள கன்டெய்னர்களில், பணம் உள்ளதாகவும், தொகுதி மக்களுக்கு வழங்க வைத்துள்ளதாகவும் உறுதி செய்யப்படாத தகவல் ஒன்று உலா வருகிறது. அந்த இடத்தில் ஏராளமான மக்கள் குவிந்து இருப்பதும் சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

Entertainment News

Popular Categories