நடிகர் மோகன் பாபுவை சந்தித்தது குறித்து… மோடி ட்வீட்!

Published:

mohanbabu narendramodi - 2026

நடிகர் மோகன்பாபு வை சந்தித்தது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் வெளியிட்டுள்ளார்.

திருப்பதியில் உள்ள தம் கல்வி நிலையங்களுக்கு வந்து பார்க்கும்படி பிரதமரை அழைத்ததாக மன்ச்சு மோகன்பாபு தெரிவித்தார்.

உங்களை பிஜேபியில் சேரும்படி மோடி அழைத்தாரா என்று ஊடகங்கள் வினவிய போது அது விஷயம் பற்றி எதுவும் கூறுவதற்கில்லை என்று பதிலளித்தார் மோகன் பாபு.

mohanbabu modi - 2026

மன்ச்சு மோகன் பாபு குடும்பத்தாரோடு நிகழ்ந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்தார். மோகன்பாபு குடும்பத்தாரை சந்தித்தது மகிழ்ச்சியாக உள்ளது. சினிமாவின் முக்கியத்துவம், மக்களோடு கலாச்சாரத் தொடர்புகளை எவ்வாறு வளர்க்க முடியும் போன்ற அம்சங்கள் பற்றி பேசியதாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் பிரதமர். அதோடு மோகன்பாபு குடும்பத்தாரோடு எடுத்துக்கொண்ட போட்டோவையும் போஸ்ட் செய்துள்ளார்.

பிரதமர் மோடியை சந்தித்தது குறித்து “வாட் எ மேன்!” என்று குறிப்பிட்டு மோகன்பாபு செய்த டிவீட்டை அதோடு இணைத்துள்ளார் பிரதமர் மோடி.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img