ரஜினி பெண் 2ஆவது திருமண சர்ச்சை கிளப்பிய திமுக எம்எல்ஏ! ஹெச்.ராஜா கொடுத்த சம்மட்டி அடி!

hraja - 2026

துக்ளக் பத்திரிகையின் 50- வது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த், ‘பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது, அந்த சிலைகளுக்கு செருப்பு மாலை போடப்பட்டது’ என்று முந்தைய வரலாற்று நிகழ்வு குறித்தும், அப்போது துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி தன் இதழில் வரைந்த படம், கட்டுரை குறித்தும் பேசினார்.

ரஜினி குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வு குறித்து தி.க.வைச் சேர்ந்த பலர் கடும் எதிர்ப்பு கிளப்பினர். இது குறித்து ரஜினி மீது காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. திமுக., முரசொலி என்பது குறித்தும் ரஜினி கருத்துக் கூறியதால், திமுக.,வினரால் அதனை ஏற்க முடியவில்லை.

முன்னர்,திமுக., தலைவர் மு.கருணாநிதி உயிருடன் இருந்த போது, ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோதெல்லாம், பெரியவர் இருக்கும் வரை அரசியல் குறித்து சிந்தித்துப் பார்க்க மாட்டேன், அவர் மீது நன்றிக்கடன் பாராட்டுவேன் என்றெல்லாம் 1996இல் நடைபெற்ற நிகழ்வுகளை வைத்து ரஜினி பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.

ALSO READ:  ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ஜெயலலிதாவின் யதேச்சாதிகாரம், ஊழலை எதிர்த்து தமிழ் மாநில காங்கிரஸ் என ஜி.கே.மூப்பனாரைக் கொண்டு தொடங்கி, தமிழகத்தில் 96ல் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டவர் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி. சோ மட்டும் ரஜினி, ஜி.கே.மூப்பனார் ஆகியோரை முன்னிறுத்தி அவ்வாறு ஒரு முயற்சியைச் செய்யாவிட்டால், மு.கருணாநிதி அப்போது ஆட்சிக்கு வந்திருக்கவும் முடியாது, மத்தியில் ஆட்சியில் பங்கேற்றிருக்கவும் முடியாது, பாஜக.,தலைமையிலான தே.ஜ.கூட்டணியில் அங்கம் வகித்து, காற்றைக்கூட விலை பேசி விற்று 2ஜி ஊழலில் திளைத்து பெரும் கோடீஸ்வரர்களாக உருமாறியிருக்கவும் முடியாது.

ஆனால், ஜெயலலிதாவை பகைத்துக் கொண்டு போயஸ் கார்டனில் எதிர் அரசியல் நடத்த சோ ராமசாமி மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட மு.கருணாநிதி, ஜி.கே.மூப்பனார், ரஜினி கூட்டணி எவ்வாறு மாற்றத்தைத் தந்தது என்பதை தமிழக அரசியலை அறிந்த அறிவுள்ளவர் எவரும் அறிவர்.

அன்று, ரஜினிக்கு இருந்த அந்த நன்றிக் கடன் இன்று திமுக.,வுக்கு இல்லாமல் போயிற்று. என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை செய்நன்றிகொன்ற மகற்கு என்று வள்ளுவர் கூறியவாய்மொழியைப் போல், செய் நன்றி கொன்ற திமுக.,வுக்கு இப்போது உய்வு எதுவும் இல்லை என்பதையே அண்மைக் கால அரசியல் நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

ALSO READ:  10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

அந்த செய்நன்றி மறந்த திமுக., கூட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ., ஜெ. அன்பழகன் தனது டிவிட்டர் பதிவில், ”ரஜினி பொண்ணுக்கு இரண்டாவது கல்யாணம் யாரால் ஆச்சு.? தன் குடும்பத்துக்கே சீர்திருத்தம் செய்தவர் பெரியார்” என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, பதிலடி கொடுத்துள்ளார். ‘இந்து பெண்கள் மறுமண சட்டம் வந்தது 1856 – ல், ஆனால் ஈவேரா பிறந்ததோ 1879 – ல் அப்படியிருக்கையில் திமுக பரப்பும் பொய்யை பாருங்கள்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

thanthaiperiyar - 2026
ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories