December 7, 2025, 10:18 AM
26 C
Chennai

தஞ்சை பெரிய கோயிலில் அறநிலையத் துறை சொன்னபடி ‘கும்பமுழுக்கு’! நீதிமன்றம் உத்தரவு!

08 July11 Tanjaor - 2025

தஞ்சை பெரிய கோவிலில் ஆகம முறைப்படி கும்பாபிஷேகம் நடத்துவதா அல்லது தமிழ் முறைப்படி குடமுழுக்கு நடத்துவதா என்று சர்ச்சைகள் எழுந்த போது, அறநிலையத்துறை சமஸ்கிருதம், தமிழ் கலந்து கும்பமுழுக்கு நடத்தப்படும் என்று நீதிமன்றத்தில்கூறியது. அதனை ஏற்ற நீதிமன்றம், தமிழில் குடமுழுக்கு நடத்தப் பட வேண்டும் என்றுகோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்றுகோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. ஆகம விதிப்படியே கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அறநிலையத்துறை கூறிய படி தற்போது கும்பாபிஷேகம் நடத்தப் பட உள்ளது.

tanjor - 2025

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் எனக்கூறி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் அமர்வு விசாரித்தது.

தமிழக அறநிலையத்துறை, ‘பிப்.1ல் தொடங்கும் யாகசாலை பூஜை முதல் பிப்.5ல் நடக்கும் கும்பாபிஷேக நாள் வரை தமிழில் திருமுறை பாராயணம் பாடப்படும். தமிழை விலக்கி வைத்துள்ளதாகக் கூறுவது சரியல்ல. தமிழ், சமஸ்கிருதத்தில் ஆகம விதிகள்படி குடமுழுக்கு நடத்தப்படும்’ என பதில் மனு செய்தது.

நேற்று (ஜன.,30) அரசுத் தரப்பில், ‘இதற்கு முன் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதுபோல் தற்போது நடத்தப்படும். இதற்கு முன் முழுவதுமாக தமிழ் முறைப்படி குடமுழுக்கு நடந்தது என்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை’ என தெரிவிக்கப்பட்டது.

tanjavur big temple kumbabishekam - 2025

இதை அடுத்து, தமிழிலேயே குடமுழுக்கு நடத்தப் பட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள், ஹிந்து சமய அறநிலையத்துறை ஏற்கெனவே அளித்த உறுதிமொழிப்படி, தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் ஆகம முறைப்படி நடத்த வேண்டும். இதனை உறுதி செய்து அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.

எனவே, அறநிலையத்துறை கூறிய படி, முதல் ஆறு நாட்களும் திருமுறை பாராயணம் மற்றும் மகுடாகம முறைப்படி கும்பமுழுக்கு நடத்தப்படும் என்று கூறப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Entertainment News

Popular Categories