கொரோனா வைரசும் ஹிந்துக்களின் நோய்த் தடுப்பு மரபுகளும்!

Published:

corona vigil - 2026

கொரோனா வைரசும் நாம் மறந்த ஹிந்து நோய்த்தடுப்பு மரபுகளும்

இரு கை கூப்பி வணக்கம் சொல்லியது.

வாசல் முற்றத்தில் நீரில் கால் கழுவி பிறகு வீடுநுழைந்தது.

மாவிலை தோரணங்கள் கட்டியது.

மஞ்சள் பூசி குளித்தது தெளித்து விளையாடியது.

உணவில் மிளகு சுக்கு மஞ்சள் சேர்ந்தது.

வாழை இலையில் உணவு பரிமாறியது .

வேப்பங்குச்சி உப்பு கரி கொண்டு பல் துலக்கியது.

வேப்பம் இலையில் புகை போட்டது.

மாட்டுச் சாணம் தெளித்து வாசல் பெருக்கியது.

வருடம் ஒரு முறை வீட்டிற்கு வெள்ளை அடித்தது.

எலுமிச்சம் பழம் காய்ந்த மிளகாய் படிகாரம் உத்திரசங்கு இவைகளை தலை வாசலில் தொங்க விட்டது.

நெரிசல் மிக்க இடங்களில் இருந்து திரும்பியதும் உடைகளை கழற்றி வீட்டிற்கு வெளியே வைத்தது. பின்வாசல் வழியாக சென்று குளித்துவிட்டு வீட்டில் நுழைந்தது.

வெற்றிலை பாக்கு போடுவது.

கசாயம் ஊறல் குடிப்பது.

வெள்ளாவியில் உடை வெளுத்தது.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

மரண வீட்டிற்கு சென்றுவந்தால் மஞ்சள் நீர் தெளித்து நீராடி வீட்டிற்குள் செல்லுதல்.

இறந்த பிரேதத்தை எரித்தது.

அம்மை வந்தால் வெப்பம் பத்திரம் போடுதல்.

வீட்டு முற்றத்தில் துளசிச் செடியை நாட்டி வைத்தல்.

மாலை நேரம் வீட்டில் சாம்பிராணி ஏற்றி புகை போட்டது.

இவை அனைத்துமே கிருமியை தடுப்பதும் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதும் சுத்தமாக வாழ்வதுக்கு மட்டுமே தமிழனால் உருவாக்கப்பட்ட மரபு என்பது புரியாமல் இன்று நடக்கும் பெரு அழிவில் பங்காளர்களாக இருக்கிறோம்

ஹிந்து மரபு என்பது, மதம் அல்ல… வாழ்வியல் நெறிமுறை!

  • செல்வம் நாயகம்

Related articles

Recent articles

spot_img