என்கவுண்டர் நடத்தியும் பயமில்லையே! திசா போல் ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு சம்பவம்!

Published:

hyderabad lady murder - 2026

என்கௌண்டர் செய்து நான்கு பேர் கொல்லப் பட்ட சம்பவத்தைக் கண்டும் பயமில்லாதது போல், திசா மாதிரியான மற்றுமொரு சம்பவம் ஹைதராபாதில் நடந்துள்ளது.

ரங்கா ரெட்டி மாவட்டம் ‘சேவெள்ள’ மண்டலம் தங்கடபல்லியில் திசா போன்றதே மற்றுமொரு வன்கொடுமை கொலை நடைபெற்றுள்ளது.

hyderabad lady murder1 - 2026

ஒரு இளம்பெண்ணை வன்கொடுமை செய்து அதன் பின் தலையில் பாறாங்கல்லை போட்டு கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

செவ்வாய் அன்று காலையில் தங்கடபல்லி எல்லையில் உள்ள பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத பெண்ணின் (30) உயிரற்ற சடலத்தை அடையாளம் கண்ட உள்ளூர் வாசிகள் போலீசாருக்கு செய்தி தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

hyderabad lady murder2 - 2026

பெண்ணின் சடலத்தின் மீது துளி கூட துணையில்லை. பாராங்கல்லைப் போட்டு தலையை உடைத்து மூஞ்சியை சிதைத்து அடையாளம் தெரியாமல் செய்துள்ளார்கள். உடலில் துணி இல்லாததால் வன்கொடுமை செய்து அதன்பின் வேறு எங்கோ கொலை செய்து இங்கு கொண்டு வந்து போட்டுள்ளதாக போலிஸார் தெரிவித்தனர். ஒருவர் அல்ல. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

ஆதாரங்களுக்காக சுற்றுப்புறங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை செய்து வருகிறார்கள். பெண்ணுக்குத் தொடர்பான எந்த ஒரு பொருளும் பக்கத்தில் கிடைக்காததால் விவரங்களைச் சேகரிப்பதில் போலீசார் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

சேவெள்ள டிஎஸ்பி ரவீந்தர் ரெட்டி சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்துகிறார். க்ளூஸ் டீம், டாக் ஸ்குவாடு உதவியோடு போலீசார் ஆதாரங்களை சேகரிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img