உலகின் இரண்டாவது பெரிய மக்கள்தொகை நாடு! இந்தியாவில் ஏன் கொரோனா பாதிப்பு பெரிதாக இல்லை?!

corona prevension - 2026

உலகையே அச்சுறுத்திக் கொண்டு வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, உலக நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் ஏன் அவ்வளவு பெரிதாக இல்லை என்று ஆச்சரியப் பட்டு கட்டுரைகள் எழுதி வருகின்றன சர்வதேச ஊடகங்கள்.

கிழக்கு மேற்கு என்று எந்த இடமும் விடாமல், சிறிய நாடுகள் எல்லாம் பெரிதாக பாதிப்பைச் சந்திக்கும் போது, மக்கள் நெருக்கமும், 1.3 பில்லியன் என்ற மிகப் பெரும் மக்கள் தொகையும் கொண்ட இந்தியாவில் அவ்வளவாக கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கப் படுவது எப்படி என்ற ஆச்சரியம் கலந்த கேள்வியை ஊடகங்கள் எழுப்புகின்றன! இது குறித்து நியுயார்க் டைம்ஸில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது.

‘கொரோனா’ வைரஸ் பாதிக்கப் பட்ட நாடுகளின் பட்டியலில் சீனாவுக்கு அடுத்து இத்தாலி உள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் தகவல் படி, இத்தாலியில் இதுவரை 2,503 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் பிப்.21ல் ‘கொரோனா’ வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று. வைரஸ் பரவத் தொடங்கிய மூன்றே வாரத்தில் மார்ச் 12ஆம் தேதி இந்த எண்ணிக்கை 12,462 ஆக அதிகரித்தது.

இதில் 10 சதவீதம் பேர் ஐ.சி.யூ.,வில் உள்ளனர். 5 சதவீதம் பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மார்ச் 12இல் 12,462 பேருக்கு பாதிப்பு இருந்தது. இது மார்ச் 16ல் 24,747 என அதிகரித்தது. 5 நாட்களில் பாதிப்பு இரண்டு மடங்கு என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வூகானில் ‘கொரோனா’ தொற்று ஏற்பட்டு, ஜன. 21ல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 251 ஆக இருந்தது. இதை அடுத்து, அந்த நாடு உடனடியாக வூகான் பகுதியை தனிமைப்படுத்தியது. வைரஸ் பரவலை பெருமளவு தடுத்தது.

தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் உத்தியை இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பின்பற்றவில்லை என்று கூறப் படுகிறது.

அதுபோல், இப்போது இந்தியாவிலும், வைரஸ் தொற்றுப் பரவல் கட்டுப் படுத்தப் படும் முறைகள் குறித்து உலக நாடுகள் ஆர்வத்துடன் உற்று நோக்குகின்றன.

வெளிநாட்டில் இருந்து வருபவர்களை சோதித்து, உரிய மருத்துவ வசதி, முகாமுக்கு அனுப்பி, தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து இந்திய அதிகாரிகள் பெருமளவு பணி செய்கின்றனர். நெருக்கடியான கட்டத்தில் எப்படி பணி செய்வது என்பதைப் பாராட்டி பிரதமர் மோடியும் தனது டிவிட்டர் பதிவில் இதனைக் குறிப்பிட்டார்.

அதே போல், கொரோனா குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் டிஜிட்டல், அச்சு ஊடகங்களின் பணி பாராட்டுக்கு உரியது’ என்று பிரதமர் மோடி பாராட்டும் தெரிவித்தார்.

corona prevensions - 2026

பாஜக., எம்.பி.,க்களின் வருடாந்திர கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசிய போது, கொரோனா பரவல் ஒழிக்கப்படும் வரை பா.ஜ., தரப்பில் கட்சி, அரசியல் நிகழ்ச்சிகள் நடத்தப்படாது. பா.ஜ., எம்.பி.,க்கள், கொரோனா குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும், கருத்து வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்.

https://twitter.com/Sujay__Raj/status/1239463684792971265

கொரோனாவுக்கு எதிரான பணியில் விமான நிலையங்களில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், நர்ஸ்கள், ஊழியர்கள், பாதுகாப்பு படை வீரர்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்கள். கொரோனா குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் டிஜிட்டல், அச்சு ஊடகங்களின் பணியும் பாராட்டுக்கு உரியது. மீடியாக்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றன. அவர்களை சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும்படி எம்பி.,க்கள் கேட்கலாம். அவரவர் தொகுதிகளில் உள்ள மக்களிடம் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்… என்று குறிப்பிட்டார்.

1 COMMENT

  1. இதை கொஞ்சம் எங்கள் நாட்டில் ராகுல் காந்தி என்ற எட்டப்பர் இருக்கிறார் அவரிடம் உரக்க சொல்லுங்கள் அப்போதாவது திருந்துகிறாரா என்று பார்ப்போம் ஜெய் ஹிந்த்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Entertainment News

Popular Categories