முத்துக்குமரன் என்பவர் இயக்கத்தில் ரங்கநாதன் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் நகைச்சுவை திரைப்படம் என்று தர்ம பிரபு படத்தை குறிப்பிட்டு விளம்பரப் படுத்தி இருக்கிறார்கள்!
சிரிப்பு நடிகர் யோகிபாபு நடிப்பில் இந்தப் படம் வெளியாகியிருக்கிறது! ஜஸ்டின் பிரபாகர் என்பவர் இதற்கு இசை அமைத்துள்ளார்! ஸ்ரீவாரி பிலிம்ஸ் இதனை தயாரித்திருக்கிறது!
இதில் யோகிபாபு, எமதர்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்! ரமேஷ் திலக் சித்திரகுப்தனின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்! ராதாரவி, ஜனனி ஐயர், ஆஷிக் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள்! இதில் பாஸ்கி என்பவர், நாடக மேடை சோ ராமசாமி வேடத்தில் அதே உடலமைப்பில் உடல் அசைவில் அதே காஸ்டியூமில் நடித்துள்ளார்!
மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமியை மிகவும் இழிவு படுத்தும் வகையில் படத்தில் காட்சிகள் அமைந்துள்ளதாக பலரும் தங்கள் கொந்தளிப்பை கருத்தாக தெரிவித்துள்ளனர்!
துக்ளக் ஆசிரியராக இருந்த சோ ராமசாமி மிகச்சிறந்த நாடக எழுத்தாளர் இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என்று பெயர் எடுத்தவர்! அவரது நாடகங்கள் பல தொடக்க காலத்தில் அரசியல் ரீதியாக காமெடி வசனங்கள் பொதிந்திருந்தன. நெருக்கடிநிலை காலத்தில் கடும் எதிர்ப்பு புயலைக் கிளப்பியது அவரின் நாடக வசனங்கள்!
சோ ராமசாமி எழுதிய சில நாடகங்களில் புராண கதாபாத்திரங்கள் அதிகம் தலைதூக்கும்! நாரதர், எமதர்மன், தேவலோகம், சிவபெருமான் என்று பல கதாபாத்திரங்களை புராணகால பாத்திரங்களுடன் ஒப்பிட்டு அவர் நாடகமாக்கும் செய்திருந்தாலும், அவை எவர் மனதையும் புண்படுத்தி இருக்காத தன்மை கொண்டதாக இருந்தன!
நகைச்சுவை மட்டுமே இருக்குமே தவிர புராண கதாபாத்திரங்களை இழிவுபடுத்தும் தன்மை அவருடைய நாடகங்களில் இருந்ததில்லை! சோ எழுதிய என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்ற நாடகம் இத்தகைய புராண கதா பாத்திரங்களை முன்னிலைப்படுத்தும் அருமையான நாடகம் என்று சொல்லலாம்!
இதில் நிகழ்கால கதாபாத்திரங்களால் தேவலோகத்தில் ஏற்படும் கடும் அமளி துமளி இவற்றை வைத்து அந்த நாடகத்தை எழுதி இருப்பார்! அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த அதிசய பிறவி என்ற திரைப்படத்திலும் சித்திரகுப்தன் கதாபாத்திரத்தில் நடித்து தன்னுடைய குயுக்தி நிறைந்த வார்த்தைகளால் எமதர்மனுக்கு ஏற்படும் சிக்கல்களை தீர்த்து வைப்பார்! இதிலும் அரசியல் ‘பஞ்ச்’ புராணப் பாத்திரங்களின் ஊடே வெளிப்படும்!
ஆனால் தற்போது வெளிவந்துள்ள தர்மப்பிரபு படம் முழுக்க முழுக்க இந்து மத கடவுளர்களையும் புராணங்களையும் கொச்சைப்படுத்துவதுடன் சோ ராமசாமி எனும் மாமனிதரை இழிவுபடுத்தியும் உள்ளது!
அதே நாடகத்துறை, அதே சினிமா துறை, அதே பத்திரிகை உலகம் என ஊடகத்தின் இன்னொரு பிரிவில் கோலோச்சிய ஒரு மாமனிதரை தாங்கள் இழிவுபடுத்துகிறோம் என்ற உள்ளுணர்வு கூட இல்லாமல் அல்லது வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய எண்ணத்தில் இத்தகைய காட்சிகளை அமைத்துள்ளார்கள் என்று ரசிகர்கள் பலரும் கண்டனங்களையும் வேதனைகளையும் தெரிவித்து வருகின்றனர்!
குறிப்பாக பாஸ்கி என்ற இந்த நபர் நாடகத்தில் நடித்து பெயர் வாங்கியவர் தான்! அவரே தன்னுடைய குருநாதர்களில் ஒருவர் என்று சோ ராமசாமியை அண்ணாந்து பார்த்து மலைத்தவர் தான்! அவர் சோ ராமசாமி இல்லாத சூழ்நிலையில் அவர் குறித்த கேலி கிண்டல் நையாண்டி என்பதோடுகூட அவதூறு கிளப்பும் வகையில் வசனங்களை பேசி தாம் நடிக்கிறோம் என்ற எண்ணம் கூட இல்லாமல் இவ்வளவு கீழ்த்தரமாக நடித்திருக்கிறார் என்ற கோபம் தான் பலருக்கும் எழுகிறது!
பலரும், “நீ மொட்டை பாஸ்கி இல்ல… பொட்ட பாஸ்கி! நீ அந்த வசனம் பேசும் போதே சோ ராமசாமி அவர்களை கிண்டல் செய்கிறோம் என்று உன் அறிவுக்கு எட்டவே இல்லையா?! அந்த அளவுக்குக் கூட நீ அறிவு கெட்டவனா?” என்று கேள்வி எழுப்புகிறார்கள்! இப்படிப்பட்ட கூமுட்டைகளைத் தான் இத்தனை நாட்களில் தாங்கள் மேடையேற்றி நாடக நடிகனாக அழகு பார்த்தோமா?! என்று பலரும் கோபத்துடன் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
தாம் இவ்வாறு வசனம் பேசும்போதே, அது சோ சாரை இன்ஸல்ட் செய்கிறது என்ற எண்ணம் தோன்றியிருக்கும், ஆனால் ஒரு படத்தின் வாய்ப்புக்காக, இவ்வாறு கேவலமாக பாஸ்கி நடந்து கொண்டு, தனது கோழைத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் என்று பொருமுகிறார்கள் சோ ரசிகர்கள்!
கீழà¯à®¤à¯à®¤à®°à®®à®¾à®© சிநà¯à®¤à®©à¯ˆà®¯à®¿à®²à¯ ஒர௠படமà¯.இவரà¯à®•à®³à¯ˆ ஆணà¯à®Ÿà®µà®©à¯ தான௠தணà¯à®Ÿà®¿à®•à¯à®• வேணà¯à®Ÿà¯à®®à¯.