February 23, 2026, 8:11 AM
26 C
Chennai

கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பெண் பலி..31பேர் சிகிச்சையில்

கேரளா காசர்கோடு மாவட்டத்தில் உள்ள செருவத்தூரில் ஞாயிற்றுக்கிழமை ஒரு இளம்பெண் , உள்ளூர் உணவகத்தில் பரிமாறப்பட்ட ஷவர்மா உணவு சாப்பிட்ட நிலையில் உணவு விஷத்தன்மை இருந்ததால் உடலில் விஷம் கலந்து இறந்தார்.

கேரளா கரிவள்ளூரைச் சேர்ந்த நாராயணன் மற்றும் பிரசன்னா தம்பதியரின் மகள் தேவானந்தா (16) என்பவரே உயிரிழந்துள்ளார். உணவில் விஷம் கலந்ததால், சிறுமி காஞ்சங்காட்டில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

Devananda - 2026
mv govindan food poisoning - 2026
Minister M V Govindan visits patients who have been admitted to the Kanhangad District Hospital for food poisoning from a local eatery. Photo: I&PRD, Kasaragod
Cheruvathoor - 2026

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உணவு நச்சுத்தன்மையின் அறிகுறிகளைக் காட்டியதால்,  கண்ணங்காட்டில் உள்ள ஐடியல் கூல்பாரில் ஷவர்மா சாப்பிட்ட 31 பேர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்று மாவட்ட மருத்துவ அலுவலர் (டிஎம்ஓ) டாக்டர் ஏ வி ராமதாஸ் தெரிவித்தார். செருவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நீலேஸ்வரம் தாலுகா மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகள் தேவைப்பட்டால் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

செருவத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஐடியல் கூல்பாரில் கடந்த 2 நாட்களாக உணவு அருந்தியவர்கள் ஏதேனும் உடல்நலக் குறைகளை எதிர்கொண்டால் அருகில் உள்ள சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற வேண்டும் என டிஎம்ஓ தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உணவு பாதுகாப்பு ஆணையருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு டிஎம்ஓவுக்கு உத்தரவிட்டார். விசாரணை அறிக்கையின் அடிப்படையில் கடை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்திற்கு வந்த அமைச்சர் எம்.வி.கோவிந்தன் மாவட்ட மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

இச் சம்பவம் குறித்து வழக்குகள் பதிவாகியதை அடுத்து, சுகாதாரத் துறையினர் ஆய்வு நடத்தி, உணவகத்தில் இருந்து ஷவர்மா எடுத்தவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை உறுதி செய்தனர். இதுகுறித்து செருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் சி.பிரமீளா கூறியதாவது,

சம்பவத்தையடுத்து, உணவகம் மூடப்பட்டுள்ளது. இதுபோன்ற மற்ற கடைகளிலும் சோதனை நடத்தப்படும், என்றார்.

ஷவர்மா, முதலில் மெல்லிய துண்டுகளாக வெட்டப்பட்ட இறைச்சியைக் கொண்ட லெவண்டைன் உணவாகும், இது பல ஆண்டுகளாக கேரளா முழுவதும் பிரபலமாக உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Entertainment News

Popular Categories