கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பெண் பலி..31பேர் சிகிச்சையில்

கேரளா காசர்கோடு மாவட்டத்தில் உள்ள செருவத்தூரில் ஞாயிற்றுக்கிழமை ஒரு இளம்பெண் , உள்ளூர் உணவகத்தில் பரிமாறப்பட்ட ஷவர்மா உணவு சாப்பிட்ட நிலையில் உணவு விஷத்தன்மை இருந்ததால் உடலில் விஷம் கலந்து இறந்தார்.

கேரளா கரிவள்ளூரைச் சேர்ந்த நாராயணன் மற்றும் பிரசன்னா தம்பதியரின் மகள் தேவானந்தா (16) என்பவரே உயிரிழந்துள்ளார். உணவில் விஷம் கலந்ததால், சிறுமி காஞ்சங்காட்டில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

Devananda - 2026
mv govindan food poisoning - 2026
Minister M V Govindan visits patients who have been admitted to the Kanhangad District Hospital for food poisoning from a local eatery. Photo: I&PRD, Kasaragod
Cheruvathoor - 2026

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உணவு நச்சுத்தன்மையின் அறிகுறிகளைக் காட்டியதால்,  கண்ணங்காட்டில் உள்ள ஐடியல் கூல்பாரில் ஷவர்மா சாப்பிட்ட 31 பேர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்று மாவட்ட மருத்துவ அலுவலர் (டிஎம்ஓ) டாக்டர் ஏ வி ராமதாஸ் தெரிவித்தார். செருவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நீலேஸ்வரம் தாலுகா மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகள் தேவைப்பட்டால் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

செருவத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஐடியல் கூல்பாரில் கடந்த 2 நாட்களாக உணவு அருந்தியவர்கள் ஏதேனும் உடல்நலக் குறைகளை எதிர்கொண்டால் அருகில் உள்ள சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற வேண்டும் என டிஎம்ஓ தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உணவு பாதுகாப்பு ஆணையருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு டிஎம்ஓவுக்கு உத்தரவிட்டார். விசாரணை அறிக்கையின் அடிப்படையில் கடை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்திற்கு வந்த அமைச்சர் எம்.வி.கோவிந்தன் மாவட்ட மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

இச் சம்பவம் குறித்து வழக்குகள் பதிவாகியதை அடுத்து, சுகாதாரத் துறையினர் ஆய்வு நடத்தி, உணவகத்தில் இருந்து ஷவர்மா எடுத்தவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை உறுதி செய்தனர். இதுகுறித்து செருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் சி.பிரமீளா கூறியதாவது,

சம்பவத்தையடுத்து, உணவகம் மூடப்பட்டுள்ளது. இதுபோன்ற மற்ற கடைகளிலும் சோதனை நடத்தப்படும், என்றார்.

ஷவர்மா, முதலில் மெல்லிய துண்டுகளாக வெட்டப்பட்ட இறைச்சியைக் கொண்ட லெவண்டைன் உணவாகும், இது பல ஆண்டுகளாக கேரளா முழுவதும் பிரபலமாக உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

Entertainment News

Popular Categories