ரஜினி வந்தால் பாஜக.,வுக்கு கூடுதல் பலம் சேரும்: தமிழிசை சௌந்தர்ராஜன்

BJP TN leader Tamizhisai soundararajan - 2026

சென்னை:
ரஜினி வந்தால் பாஜக.,வுக்கு கூடுதல் பலம் சேரும். ஆனால், ரஜினி மட்டுமே கட்சிக்கு பலமல்ல என்று கூறினார் தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.

தமிழிசை சௌந்தரராஜன் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியவை:

பா.ஜனதாவுக்கு ரஜினி வந்தால் கூடுதல் பலம் சேரும். ஆனால், பா.ஜனதாவுக்கு ரஜினி மட்டுமே பலமல்ல. காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், கூட்டணிக்கு ஆள் வராத கட்சி பாரதீய ஜனதா. அதனால்தான் ரஜினியை கூப்பிடுகிறார்கள் என்று கூறி இருக்கிறார். முதலில் திருநாவுக்கரசர் அவரது கட்சியை பார்க்க வேண்டும்.

ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் ஆகியோர் ரஜினி பாரதீய ஜனதாவில் சேரக்கூடாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர். இவர்களுக்கு ஏன் இந்த பதட்டம்? தேசியத் தலைவர் அமித் ஷா, ரஜினி பா.ஜ.க.,வுக்கு வரலாம் என்று கூறியிருப்பதற்கு ரஜினி எந்தவொரு பதிலும் கூறவில்லை என்று சொல்கிறார்கள். எங்கள் கருத்தை நாங்கள் சொல்கிறோம். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். அதனால்தான் பலத்தை கூட்டுகிறோம்.

பிரதமர் மோடி ஓ.பன்னீர் செல்வத்துக்கு நேரம் ஒதுக்குகிறார். தன்னை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்று ஸ்டாலின் கூறியுள்ளார். பிரதமரும், ஓ.பன்னீர்செல்வமும் என்ன பேசினார்கள் என்று கூறியுள்ளார். யூகங்கள் அடிப்படையில் பேசுகிறார்கள். பிரதமருக்கு யாரை, எதற்கு என்ன காரணத்திற்காக பார்க்க வேண்டும் என்று தெரியும்.

அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. அ.தி.மு.க. அரசு சாதனை என்று கூறுவதற்கு எதுவுமே இல்லை. ஓராண்டுக்குள் கட்சி 2 ஆக உடைந்துள்ளது. 3 முதல்வர்கள் மாறி உள்ளனர். 3 அமைச்சரவை பதவி ஏற்றுள்ளது. சின்னத்தை தொலைத்துள்ளனர். இடைத்தேர்தலில் ஓட்டுக்கு நோட்டு கொடுத்து தேர்தல் ரத்தாகி உள்ளது. ஊழல் வழக்கில் 2 பொதுச்செயலாளர்களும் சிறையில் உள்ளனர். இந்த ஆட்சியில் டாஸ்மாக் ஊழல், மணல் குவாரி ஊழல் என இன்னும் ஊழல் முற்றிலுமாக ஒழியவில்லை.

தமிழக அமைச்சர்கள் பலர் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்துள்ளது. இதுதான் நடந்த நிகழ்வுகளாக இருக்கிறது. நேர்மையான, வெளிப்படையான நிர்வாகம் இந்த ஓராண்டு அ.தி.மு.க. அரசில் இல்லை. இனிமேலாவது இந்த அரசாங்கம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். மத்திய பாரதீய ஜனதாக் கட்சியின் அரசு 3 ஆண்டு ஆட்சி காலத்தில் ஒவ்வொரு துறையிலும் அமைச்சர்கள் தங்கள் சாதனைகளை வெளியிட்டுள்ளனர். அதே போல் எடப்பாடி அரசு அமைச்சர்களும் தாங்கள் செய்த சாதனைகளை வெளியிட வேண்டும்.

– என்று அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories