ரஜினி வந்தால் பாஜக.,வுக்கு கூடுதல் பலம் சேரும்: தமிழிசை சௌந்தர்ராஜன்

Published:

BJP TN leader Tamizhisai soundararajan - 2026

சென்னை:
ரஜினி வந்தால் பாஜக.,வுக்கு கூடுதல் பலம் சேரும். ஆனால், ரஜினி மட்டுமே கட்சிக்கு பலமல்ல என்று கூறினார் தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.

தமிழிசை சௌந்தரராஜன் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியவை:

பா.ஜனதாவுக்கு ரஜினி வந்தால் கூடுதல் பலம் சேரும். ஆனால், பா.ஜனதாவுக்கு ரஜினி மட்டுமே பலமல்ல. காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், கூட்டணிக்கு ஆள் வராத கட்சி பாரதீய ஜனதா. அதனால்தான் ரஜினியை கூப்பிடுகிறார்கள் என்று கூறி இருக்கிறார். முதலில் திருநாவுக்கரசர் அவரது கட்சியை பார்க்க வேண்டும்.

ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் ஆகியோர் ரஜினி பாரதீய ஜனதாவில் சேரக்கூடாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர். இவர்களுக்கு ஏன் இந்த பதட்டம்? தேசியத் தலைவர் அமித் ஷா, ரஜினி பா.ஜ.க.,வுக்கு வரலாம் என்று கூறியிருப்பதற்கு ரஜினி எந்தவொரு பதிலும் கூறவில்லை என்று சொல்கிறார்கள். எங்கள் கருத்தை நாங்கள் சொல்கிறோம். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். அதனால்தான் பலத்தை கூட்டுகிறோம்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

பிரதமர் மோடி ஓ.பன்னீர் செல்வத்துக்கு நேரம் ஒதுக்குகிறார். தன்னை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்று ஸ்டாலின் கூறியுள்ளார். பிரதமரும், ஓ.பன்னீர்செல்வமும் என்ன பேசினார்கள் என்று கூறியுள்ளார். யூகங்கள் அடிப்படையில் பேசுகிறார்கள். பிரதமருக்கு யாரை, எதற்கு என்ன காரணத்திற்காக பார்க்க வேண்டும் என்று தெரியும்.

அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. அ.தி.மு.க. அரசு சாதனை என்று கூறுவதற்கு எதுவுமே இல்லை. ஓராண்டுக்குள் கட்சி 2 ஆக உடைந்துள்ளது. 3 முதல்வர்கள் மாறி உள்ளனர். 3 அமைச்சரவை பதவி ஏற்றுள்ளது. சின்னத்தை தொலைத்துள்ளனர். இடைத்தேர்தலில் ஓட்டுக்கு நோட்டு கொடுத்து தேர்தல் ரத்தாகி உள்ளது. ஊழல் வழக்கில் 2 பொதுச்செயலாளர்களும் சிறையில் உள்ளனர். இந்த ஆட்சியில் டாஸ்மாக் ஊழல், மணல் குவாரி ஊழல் என இன்னும் ஊழல் முற்றிலுமாக ஒழியவில்லை.

தமிழக அமைச்சர்கள் பலர் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்துள்ளது. இதுதான் நடந்த நிகழ்வுகளாக இருக்கிறது. நேர்மையான, வெளிப்படையான நிர்வாகம் இந்த ஓராண்டு அ.தி.மு.க. அரசில் இல்லை. இனிமேலாவது இந்த அரசாங்கம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். மத்திய பாரதீய ஜனதாக் கட்சியின் அரசு 3 ஆண்டு ஆட்சி காலத்தில் ஒவ்வொரு துறையிலும் அமைச்சர்கள் தங்கள் சாதனைகளை வெளியிட்டுள்ளனர். அதே போல் எடப்பாடி அரசு அமைச்சர்களும் தாங்கள் செய்த சாதனைகளை வெளியிட வேண்டும்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

– என்று அவர் கூறினார்.

Related articles

Recent articles

spot_img