அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
- இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது
- தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா குறைக்கப்பட்டாலும் சென்னையில் அதிகரிப்பு
- உரிய முறையில் சிகிச்சை அளித்து வருவதால் இறப்பு குறைந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை உயர்வு
- கொரோனாவுக்கு தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையிலும் அரசு சிறப்பாக செயல்படுகிறது
- பொதுமக்கள் கட்டுப்பாட்டுடன் இருந்தால் தான் வைரஸ் பரவலை தடுக்க முடியும்
- மருத்துவர்களின் வழிகாட்டுதல்படி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது
- சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும்
- நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்
- நோய் முற்றிய பிறகு சென்றால் மருத்துவம் பலன் அளிக்காது
- அரசு கொடுத்திருக்கும் வழிகாட்டுதல்களை மக்கள் சரியாக பின்பற்ற வேண்டும்
- கொரோனா நோய் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது
- மருந்து கொள்முதல், உபகரணங்கள் கொள்முதல் ஆகியவற்றை அரசு தொடர்ந்து செய்து வருகிறது
- நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட நாள் முதல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்
- தடுப்பு நடவடிக்கைக்காக இதுவரை மாநில பேரிடர் மேலாண்மை சார்பில் 14 கூட்டம் நடத்தப்பட்டுள்ளது
- இந்திய மருத்துவ முறை மருத்துவர்கள் ஆலோசனை கூட்டம் ஒரு முறை நடத்தப்பட்டது
- சென்னை, கோவையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளன
- வெளிமாநிலத்தில் உள்ள தமிழக தொழிலாளர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது
- அவசர நிலை கருதி மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
- தொழில்துறையினருடனும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது
- அதிகாரிகள் அடங்கிய பல்வேறு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
- கோயம்பேடு சந்தை தற்காலிகமாக திருமழிசைக்கு மாற்றப்பட்டுள்ளது
- சென்னையில் தொழில் பேட்டைகள் 25 சதவீத தொழிலாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது
- களப்பணியாளர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டால் சிகிச்சை செலவை அரசே ஏற்கும்
- குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷனில் கூடுதலாக அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது
- கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு கபசுர குடிநீர் தொடர்ந்து வழங்கப்படுகிறது
- வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது
- * ஊரக பகுதி மேம்பாட்டுக்கு கொரோனா சிறப்பு நிதியாக ரூ.300 கோடி வழங்கப்பட்டுள்ளது
- 20 லட்சம் முக கவசங்கள் வாங்கப்பட்டுள்ளது
- 3 லட்சம் முக கவசங்கள் கையிருப்பில் உள்ளன
- 70 பரிசோதனை மையங்களில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது
- 4,018 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், 35,646 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன
- அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
- வேளாண் உற்பத்தி, விற்பனைக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
- கொரோனாவை தடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன
- பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டனர்
- இதன்மூலம் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது
- நோய் பரவலை தடுக்க அரசு தவறிவிட்டதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது