ஆளுநரிடம் ஸ்டாலின் வைத்த கோரிக்கை என்ன?

Stalin met governor - 2026

ஸ்டாலின் நேற்று மாலை ஆளுநரை சந்தித்த போது அவரிடம் அளிக்கப்பட்ட புகார்
கோப்புகளும், கோரிக்கையும் தமிழாக்க வடிவில் தற்போது வெளியாகி உள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள சாராம்சங்கள் எடப்பாடி மற்றும் சசிகலாவை
மையப்படுத்தியே உள்ளது…

அதில் முக்கிய விசயமாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரையும் கைது செய்ய
கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.

ஸ்டாலின் ஆளுநரிடம் விடுத்த கோரிக்கையின் தமிழாக்கம்:

மாண்புமிகு ஆளுநர் அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் நடந்துள்ள குளறுபடிகள்,
“டைம்ஸ் நவ்” வீடியோ டேப்புகள் உள்ளிட்ட விவகாரங்களில் தலையிட்டு, மீண்டும்
புதியதாக ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பினை நடத்த முதலமைச்சர் எடப்பாடி
பழனிச்சாமிக்கு உத்திரவிட வேண்டும். சி.பி.ஐ அமைப்பு நேரடியாகவும்,
பாரபட்சமற்ற முறையிலும் “கூவத்தூர்” மற்றும் “குதிரை பேரம்” குறித்து விசாரணை
மேற்கொண்டு 1988-ஆம் வருடத்திய ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு
செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், வருவாய் புலனாய்வுத் துறை மற்றும்
அமலாக்கத்துறை ஆகிய துறைகள் “குதிரை பேரம்” “பண பரிமாற்றம்” “தங்கம்
கொள்முதல்” உள்ளிட்டவை பற்றி நேரடியாக விசாரணை மேற்கொண்டு, சட்டவிரோதப்
பணப்பரிமாற்றம் நடைபெற்ற பாதைகளை கண்டறிந்து, சட்டவிரோதப் பணப்பரிமாற்றச்
சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற உறுதியான நடவடிக்கைகள்
மூலம் மட்டுமே, சந்தேகத்திற்குரிய வகையில் முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டு,
அரசியல் சட்டத்திற்கு விரோதமாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று ஒரு
அரசாங்கம் நடைபெறக் காரணமாக இருப்பவர்களின் கைகளிலிருந்து ஜனநாயகத்தை
பாதுகாக்க முடியும். அது மட்டுமின்றி, அரசியல் சட்டப்படியான நம்பிக்கை
வாக்கெடுப்பில் “குதிரைபேரம்” மூலம் வெற்றி பெற்றதை தடுத்து ஜனநாயகத்தை மீட்க
முடியும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

என்று தனது கோரிக்கையின் மூலம் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரசு இயந்திரம் சரிவர செயல்படாத நிலையில், ஆளுநருக்கே முடிவெடுக்கும் உச்சபட்ச
அதிகாரம் இருப்பதால், இது தொடர்பாக ஆளுநர் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories