கொரோனா: மருத்துவமனையில் வசதிகள் இல்லை! பரமக்குடி நோயாளிகள் போராட்டம்!

parmakkudi

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சைகள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை என கொரோனா நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் பரமக்குடியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒருவார காலமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட வில்லை என புகார் எழுந்துள்ளது.

மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு முறையான குடிநீர், மருத்துவ உபகரணங்கள் மற்றும் முகக்கவசங்கள் ஆகியவற்றை தரவில்லை என ஒருவார காலமாக புகார் அளித்து வந்தனர். மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் என அனைவரும் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தவில்லை என தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று மாலை கொரோனா நோயாளிகள் மருத்துவமனை தனிவார்டை விட்டு வெளியே வந்து அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி மற்றும் மருத்துவமனை சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து மருத்துவமனை வளாகத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மருத்துவர்கள் நோயாளிகளை சமாதானப்படுத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னரும் நோயாளிகள் தனிவார்டுக்கு செல்லாமல் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது சிகிச்சையின் மூலம் குணப்படுத்தக் கூடியதுதான் என்றாலும், ஒரே நேரத்தில் பெருமளவுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால், மருத்துவமனைகளில், நோயாளிகளுக்கு இட வசதி கிடைக்காது என்பதுதான் உலக அளவில் அனைத்து நாடுகளும் சந்தித்து வரும் பிரச்சனையாகும்.

ஊரடங்கு உத்தரவால் கொரோனா வைரஸ் தொற்று பரவும் வேகம் குறைக்கப்பட்டு வந்தது. மேலும் ஊரடங்கு தளர்வு பின்னர் தான் தொற்று பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை, பராமரிப்பு இல்லை என வதந்தி பரவி வந்தது.

இதனையடுத்து இதை உண்மையாக்கும் விதமாக தற்போது ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் பரமக்குடியில் அடிப்படை வசதிகள் இல்லை என்று நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

Entertainment News

Popular Categories