April 28, 2025, 3:00 PM
32.9 C
Chennai

கொரோனா: மருத்துவமனையில் வசதிகள் இல்லை! பரமக்குடி நோயாளிகள் போராட்டம்!

parmakkudi

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சைகள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை என கொரோனா நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் பரமக்குடியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒருவார காலமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட வில்லை என புகார் எழுந்துள்ளது.

மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு முறையான குடிநீர், மருத்துவ உபகரணங்கள் மற்றும் முகக்கவசங்கள் ஆகியவற்றை தரவில்லை என ஒருவார காலமாக புகார் அளித்து வந்தனர். மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் என அனைவரும் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தவில்லை என தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று மாலை கொரோனா நோயாளிகள் மருத்துவமனை தனிவார்டை விட்டு வெளியே வந்து அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி மற்றும் மருத்துவமனை சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து மருத்துவமனை வளாகத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மருத்துவர்கள் நோயாளிகளை சமாதானப்படுத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னரும் நோயாளிகள் தனிவார்டுக்கு செல்லாமல் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பற்றிய பிரதமர் மோடியின் அனுபவங்கள்!

கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது சிகிச்சையின் மூலம் குணப்படுத்தக் கூடியதுதான் என்றாலும், ஒரே நேரத்தில் பெருமளவுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால், மருத்துவமனைகளில், நோயாளிகளுக்கு இட வசதி கிடைக்காது என்பதுதான் உலக அளவில் அனைத்து நாடுகளும் சந்தித்து வரும் பிரச்சனையாகும்.

ஊரடங்கு உத்தரவால் கொரோனா வைரஸ் தொற்று பரவும் வேகம் குறைக்கப்பட்டு வந்தது. மேலும் ஊரடங்கு தளர்வு பின்னர் தான் தொற்று பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை, பராமரிப்பு இல்லை என வதந்தி பரவி வந்தது.

இதனையடுத்து இதை உண்மையாக்கும் விதமாக தற்போது ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் பரமக்குடியில் அடிப்படை வசதிகள் இல்லை என்று நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Entertainment News

Popular Categories