சென்னையில் இன்று 22 பேர் உயிரிழப்பு; ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை என முதல்வர் எச்சரிக்கை!

edappadi pazhanisaamy
edappadi pazhanisaamy

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ரயில்வே மருத்துவமனையில் 3 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.ஓமந்தூரார் மருத்துவமனையில் இருவர், கீழ்பாக்கம் மருத்துவமனையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என ,அம் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,620 ஆக உயர்ந்துள்ளது என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

மதுரை நகரைப் பொறுத்தவரை வெகு சிலரைத் தவிர பொதுமக்கள் பலரும் முகக்கவசம் அணியத் தொடங்கி விட்டனர். இருப்பினும், மதுரை புறநகர் பகுதிகளில் பல இடங்களில் முகக்கவசம் அணியாமல் மூன்று பேர் மோட்டார் சைக்கிளில் பயணிப்பது தொடர்கதையாகவே உள்ளது. மதுரை புறநகர் போலீஸாரும், பேரூராட்சிகள் துறையும் மாஸ்க் அணியாதோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 6,71,325 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  4,87,142 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 6,20,894 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. மேலும் ரூ. 13,84,13,810 அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இருநூறு படுக்கைகள்  சென்னை குருநானக் கல்லூரியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு  சனிக்கிழமை செய்தார். குருநானக் கல்லூரியில் 300 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மேலும் , 200 படுக்கைகள் கூடுதலாக அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக வும், பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக பரவலை பின்பற்ற வேண்டும் என்றார் முதல்வர் பழனிச்சாமி.

  • ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories