ஜி.எஸ்.டி., வரி ரொம்ப கம்மி என்கிறார் திருப்பூர் தொழிலதிபர்

IMG 20170701 WA0024 - 2026

அரசு நிர்ணயித்ததை விட அதிக வரி கட்டியே தீருவேன்அடம் பிடிக்கும்தொழிலதிபர்
டேவிட்

ஜி.எஸ்.டி., அமலான நாளில், ஜி.எஸ்.டி., வரி விதிப்பை வரவேற்று, திருப்பூர்
பின்னலாடை அமைப்பை சேர்ந்த ஒருவர் பிரியாணி விருந்து அளித்ததுடன்,
நிர்ணயிக்கப்பட்ட வரியை விட அதிகம் செலுத்த விரும்புவதாக கூறி, ‘‘ அதிக வரி
கட்டியே தீருவேன்’’ என கிளம்பி உள்ளது ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் ஜூலை. 1 ல் இருந்து ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு அமலுக்கு
வந்துள்ளது. சரக்கு மற்றும் சேவைகளின் மீதான இவ்வரி குறித்து எதிர்மறையான
கருத்துக்கள் பரவலாக காணப்பட்டாலும், ஜி.எஸ்.டி., வரி விதிப்புக்கு ஆதரவான
கருத்துக்களும் ஆங்காங்கே உருவாகி வருகிறது.

அந்த வகையில், திருப்பூரை சேர்ந்த பின்னலாடை தொழில் அமைப்பினர் ஜி.எஸ்.டி.,
வரி விதிப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததோடு, ஜி.எஸ்.டி., அமலான முதல்நாளான
நேற்று (சனிக்கிழமை) தனது தொழில் நிறுவனத்தில் பணி புரிபவர்களுக்கும்,
நண்பர்களுக்கும் பிரியாணி விருந்தளித்து கொண்டாடி உள்ளார்.

திருப்பூர் வால்ரஸ் இன்டர்நேஷனல் உரிமையாளர் டேவிட் என்பவர் ஜி.எஸ்.டி., வரி
விதிப்பால் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நண்மை தான் ஏற்படும் என்று
தெரிவித்ததோடு, பிரியாணி விருந்தளித்து நண்பர்களை குஷிப்படுத்தி உள்ளார். இது
குறித்து டேவிட் கூறுகையில், ‘ ஜி.எஸ்.டி., வரி விதிப்பு தேசத்தின்
வளர்ச்சிக்கான ஆரம்பம் தான். இதன் மூலம் வெளிப்படையாக தொழில் செய்து,
நேர்மையாக வரி செலுத்தி மகிழ்ச்சியாக வாழலாம். திருப்பூர் பின்னலாடை தொழில்
வளர்ச்சிக்கு ஜி.எஸ்.டி., வரி விதிப்பு மிக உதவியாக இருக்கும். மிகச்சிறிய
வியபாரிகளாக இருந்தாலும், ஜி.எஸ்.டி., சுய உதவிக்குழுக்களாக 10 பேர் சேர்ந்து
குழுவை உருவாக்கி செயல்படுவோம். இதற்கான பொதுவான குழுவை உருவாக்கி அதன் மூலம்
அனைவருமே முறையாக வரி செலுத்திட வழி வகை செய்யப்படும்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

மேலும் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி., வரியை விட அதிகமாக வரி
செலுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு உதவிட அனைவரும் முன்வர வேண்டும். நான் அரசு
நிர்ணயித்துள்ள வரியை விட அதிகமாக வரி செலுத்த விரும்புகிறேன். அதற்காக
வாய்ப்பினை அரசு உருவாக்கி தர வேண்டும். எனது அடிப்படை தேவைக்கு போக மீதி
வருமானம் அனைத்தையுமே அரசுக்கு வரியாக செலுத்தி இந்த நாட்டின் வளர்ச்சிக்கு
உதவ விரும்புகிறேன். இது போல அனைவருமே முன் வர வேண்டும் என்றார்.

ஜி.எஸ்.டி., வரி அதிகமாக இருக்கிறது, குறைக்க வேண்டும் என பல தரப்பினரும்
கூறி வரும் நேரத்தில், ஜி.எஸ்.டி., வரி அமலாகிய நாளில் பிரியாணி விருந்து
அளித்த தொழிலதிபர் டேவிட், அரசு நிர்ணயித்த ஜி.எஸ்.டி., வரியை விட அதிகம் வரி
செலுத்த தானாக முன்வருவது ஆச்சரியமான விஷயம் தானே.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

Entertainment News

Popular Categories