திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூல்: ட்விட் போட்ட பிரதமர்!

Published:

modi-3

திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் குறளை மேற்கோள்காட்டி தமிழில் டிவிட் செய்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி லடாக்கின் சர்ச்சைக்குரிய பகுதிக்கு சென்று பார்வையிட்டார். அப்போது ராணுவ வீரர்களிடையே உரையாற்றியபோது திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டியிருந்தார்.

இந்நிலையில் தற்போது அதன் தொடர்ச்சியாக டிவிட்டரில் குறளை மேற்கோள்காட்டி தமிழில் டிவிட் செய்துள்ளார். அதில்,

“தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர் என நம்புகிறேன்.” என்றும் , “திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும்.” என்றும் பிரதமர் எழுத்தாளர் மாலனின் கட்டுரையை இணைத்து டிவிட் செய்துள்ளார்.

தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர் என நம்புகிறேன்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

Related articles

Recent articles

spot_img