சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியை சேர்ந்த ராஜரத்தினம் மகள் தாட்சாயிணி(வயது 24). இவர் ராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் எலக்ட்ரோ ஓமியோபதி மருத்துவராக பணியாற்றி வந்தார். இவர் ராமநாதபுரம் பகுதியில் உள்ள வீட்டில் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து கேணிக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். சம்பவம் குறித்து டாக்டரின் தாய், செங்கமடை பகுதியை சேர்ந்த இளைஞர் தனது மகள் சாவுக்கு காரணம் என்றும் கேணிக்கரை போலீசில் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.