December 6, 2025, 8:51 AM
23.8 C
Chennai

சென்ற வருடம் இந்நாளில்தான் ஜெயலலிதாவை மக்கள் கடைசியாகப் பார்த்தது!

 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி மரணமடைந்தார்.

அவர் கட்சியாக சென்ற வருடம் இந்த நாளில் தான் தனது கடைசி அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

 

தமிழக அரசியலில் ஜெயலலிதா என்ற பெண் சிங்கம் மிகப்பெரிய இடத்தை ஆக்ரமித்து வைத்திருந்தார்.

அவரது அதிமுக கட்சியை பாராளுமன்றத்தில் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக உயர்த்தினார். எம்ஜிஆருக்கு பின்னர் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்து சாதனை படைத்தார் ஜெயலலிதா.

 

அம்மா உணவகம், அம்மா குடிநீர் திட்டம், தாலிக்கு தங்கம், தொட்டில் குழந்தை திட்டம், மாணவர்களுக்கு இலவச மடிகணினி வழங்கும் திட்டம், இலவச, மின்விசிறி, மிக்சி, ஆடு, மாடு வழங்கும் திட்டம் என பல்வேறு மக்கள் நல திட்டங்கள் மூலம் ஏழை எளிய மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்றவர் ஜெயலலிதா.

 

அவரது கண் அசைவிற்கும், கட்டளைகளுக்கும் அத்தனை சக்தி உண்டு. சக்தி வாய்ந்த பெண் அரசியல்வாதியாக சிங்கம் போல வலம் வந்தார் ஜெயலலிதா.

தனது அரசியல் வரலாற்றில் யாரும் செல்லாத உச்சத்திற்கு சென்று கொண்டிருந்த ஜெயலலிதா கடந்த வருடம் செப்டம்பர் 22-ஆம் தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார்.

 

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னர் சென்ற வருடம் இதே நாள் செப்டம்பர் 21-ஆம் தேதி சென்னையில் மெட்ரோ பயணிகள் ரயில் சேவையை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இதுவே அவர் கடைசியாக மக்கள் மத்தியில் உயிரோடு தோன்றிய நாள் ஆகும்.

 

அதற்கு அடுத்த நாள் செப்டம்பர் 22-ஆம் தேதி உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவ போராட்டத்துக்கு பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார்.

இந்த இடைப்பட்ட நாட்களில் ஜெயலலிதாவை யாரும் பார்க்கவில்லை.
இதனால் ஜெயலலிதாவை கடைசியாக பார்த்த இந்த தினத்தை அவரது அபிமானிகள் சோகத்துடன் சமூக வலைதளங்களில் அனுசரிக்கின்றனர்.

தமிழக அரசியலில் தனக்கென ஒரு சகாப்தத்தை உருவாக்கிய ஜெயலலிதா விட்டுச்சென்ற இடத்தை ஒரு வருடம் ஆகியும் இதுவரை யாரும் நிரப்பவில்லை.

News: கே.சி. சாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories