December 6, 2025, 7:56 PM
26.8 C
Chennai

வரதட்சணை கேட்டு துன்புறுத்தல்! ராணுவ வீரர் மனைவி தற்கொலை முயற்சி!

poison

ராணுவ வீரர், மனைவியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதற்காக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே நகரி கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரது மகள் நந்தினிக்கும், அதே பகுதியை சேர்ந்த ராணுவத்தில் பணிபுரியும் அருண் பாண்டியருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் மணப்பெண்ணிற்கு 5 சவரன் நகையும் 2.5 லட்சம் மதிப்பிலான வரதட்சனை கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் கூடுதலான வரதட்சனை கொடுக்க வேண்டும் என்று அருண்பாண்டியனின் குடும்பத்தினர் நந்தினியை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது

அருண்பாண்டியனின் தாய் அல்லிராணி, தந்தை பாண்டியன் ஆகியோர் நந்தினியின் சகோதரிகள் பிரியங்கா, இலக்கியா தகாத வார்த்தைகளால் கூறி திட்டியதாக கூறப்படுகிறது.

arun-kumar

இந்நிலையில் திருமணமாகி ஒரு மாதத்திலேயே கணவர் பணி நிமித்தமாக தில்லிக்கு சென்றுவிட்டார். திருமணமான ஒரு மாதத்தில் பணிக்குச் சென்ற அருண்பாண்டியன் மீதி வரதட்சணை பணத்தை கொடுத்தால் மட்டுமே தான் திரும்பி வருவேன் என்றும், உன்னுடன் வாழ்வேன் என்றும் கூறியுள்ளார்.

இதனால் திருமணமான ஒரு மாதத்திலேயே தன்னுடைய பிறந்த வீட்டிற்கு சென்ற நந்தினி 8 மாதங்களுக்கு முன்பாகவே வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று மாலை வாடிப்பட்டி காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளிக்கச் சென்ற போது வாடிப்பட்டி காவல் நிலைய பெண் ஆய்வாளர் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல், நந்தினியை கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த நந்தினி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். பின்னர் அவரை மீட்டு குடும்பத்தினர் அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சிகிச்சையின் போது நந்தினி பேசிய காணொளியில் தனது கணவன் மட்டுமே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories