அறந்தாங்கி
அறந்தாங்கி அருகே எரிச்சி கிராமத்தில் பள்ளி மாணவியை கார்மோதியதைகண்டித்தும் மோதியவரை கைது செய்யகோரியும் பள்ளி எதிரே வேகத்தடை அமைக்ககோரியும் மாணவர்கள் பஸ் மறியல் செய்தனர்.
அறந்தாங்கி அருகே எரிச்சி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது இந்த பள்ளியில் அருகில் உள்ள குரும்பூர் கிராமத்தைசேர்ந்த மாதவி(17) பிளஸ்டு பயின்று வருகிறார் இந்நிலையில் காலை வழக்கம்போல சைக்கிளில் பள்ளிக்கு வந்தார் அவர் சாலையில் வந்து பள்ளி அருகில் சென்றபோதுபின்னால் வந்த கார் மோதி தலையில் பலத்த காயமடைந்தார் காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு புதுக்கோட்டை மருத்துவகல்லூரி மருத்துவனைக்கு கொண்டு சென்றனர்.இது பற்றிய தகவல் தெரிந்தவுடன் எரிச்சி பள்ளி மாணவர்கள் சாலையில் திரண்டு அப்பகுதியில் வேகத்தடை அமைக்ககோரியும் விபத்திற்கு காரணமானவரை கைது செய்யகோரியும் மறியல் செய்தனர்.பின்னர் இது பற்றிய தகவல் தெரிந்தவுடன் அறந்தாங்கி போலீஸ் நிலைய சப்இன்ஸ்பெக்டர் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் உங்கள் கோரிக்கு விரைவில் மேல் அதிகாரிகள் கவனத்திற்குகொண்டு சென்று சரிசெய்யப்படும் என்று உறுதி கூறியதை தொடர்ந்து மாணவ மாணவிகள் கலைந்து சென்றனர் இச்சம்பவம் காரணமாக அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
படவிளக்கம் அறந்தாங்கி அருகே பள்ளி மாணவியை கார்மோதியதைகண்டித்து மாணவர்கள் மறியல் செய்தனர்.


