அறந்தாங்கி
அறந்தாங்கியில் நகராட்சி அதிகாரிகள் காலை நேரத்தில் குடிநீரை ஆய்வு செய்தனர்.
தமிழகம் முழுவதும் தற்போது டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அரசின் உத்தரவின் பேரில் நகராட்சி பகுதியில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் நகராட்சி கமிசினர் பரிந்துரைப்படி அறந்தாங்கி நகராட்சி பொறியாளர் மீரான்அலி தலைமையில் துப்புரவு ஆய்வாளர் சேகர் முன்னிலையில் நகராட்சி அலுவலர்கள் நேற்று காலை அறந்தாங்கி நகரில் குடிநீரை ஆய்வு செய்தனர் ; அறந்தாங்கியில் காலை என்ஜிஒ காலணி,புதுத்தெரு டாங்க்,ரயில்வேபீடர்ரோடு அரசு மருத்துவமனை அருகில் அண்ணாநகர்,எல்என்புரம்,கோபாலசமுத்திரம்,வீரமாகாளியம்மன்கோயில் தெரு,நாடிமுத்து டாங்க் ஆகிய பகுதிகளில் 9 பேர் கொண்ட குழுவினர் ஒரு குழவிற்கு இருவர் வீதம் 18 பேர்கள் ஆய்வில் ஈடுபட்டனர்.


