விருதுநகர் மாவட்ட மத்திய அரசின் பொது சேவை உரிமையாளர்களின் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர் அவர்கள் அளித்த கோரிக்கைமனுவில் வைவா (விஐவிடபிள்யூ) என்கிற அமைப்பு விருதுநகர் மாவட்ட அளவில் உள் ள மத்திய அரசின் பொது சேவை உரிமையாளர்களின் கூட்டமைப்பாகும். இந்த அமைப்பின் உறுபினர்கள் அனைவரும் மத்திய, மாநில அரசுகளின் அனைத்து சேவைகளையும் பொதுமக்களுக்கு இன்றளவும் குறைந்த கட்டணத்துடன் சேவை மனதுடன் செய்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டில் தமிழக அரசின் இ-சேவை திட்டமானது அனைத்து பொது சேவை மையங்களுக்கும் சீனியாரிட்டி அடிப்படையில் வழங்கப்படும் என்று வாக்களிப்பட்டு அதன் அடப்படையில் விருதுநகர் மாவட்ட அளவில் சுமார் 39 நபர்களுக்கு இரண்டு தவணைகளாக வழங்கப்பட்து.ஆனால் அதன் பின்னர் நிறுத்தப்ட்டது. காரணம் கேட்டதற்கு முறையான தகவலை யாரும் இன்று வரை தரவில்லை. இதுறித்து மாவட்ட இ.டி.எம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடமும் முறையிட்டும் இன்று வரை அதற்கு தகுந்த விளக்கமோக தகவலோ வரவில்லை. ஆனால் சீனியாரிட்டி அடிப்படை இல்லாமல் வேறு வழிமுறைகளில் இச்சேவை பலருக்கு வழங்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. அதுகுறித்து கேட்டபோதும் அதற்கும் முறையான விளக்கம் தரப்படவில்லை.
மேலும் ஆதார் சேவைகளை மக்களுக்கு வழங்கி வந்த யுஐடிஏஐ தற்போது இச்சேவைகளை அரசு கட்டிடத்தில் மட்டுமே வைத்து இயக்க வேண்டும் என்று புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது., இதனால் ஆதார் சேவைகளை நம்பி லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ள பொது சேவை மைய உரிமையாளர்கள் அனைவரும் வீதிக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது, அதுமட்டுமல்லாமல் இதுநாள் வரை பொதுமக்களுக்கு வார நாட்கள், விடுமுறை நாட்கள், ஞாயிற்றுக்கிழமை என்று பாராமலும், தேவைப்பட்டால் அவர்களின் இருப்பிடத்திற்கே சென்றும் பொதுமக்களுக்கு ஆதார் சேவைகளை செய்து வந்த பொது சேவை மையங்கள் இன்று மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அன்றாடம் கூலி சேவைக்கு சென்று பிழைப்பு நடத்தும் ஏழை தொழிலாளர்கள் இனி ஆதார் மற்றும் தமிழக அரசின் இ -சேவைகள் பெறுவதற்கு அரசு அலுவகங்கள் மட்டுமே செல்ல வேணடும். இதனால் அவர்களின் வேலை கூலி இழப்பு மட்டுமல்லாமல், அங்கு அலைக்கழிக்கப்படுவதால் பெரும் மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு பொதுமக்கள் ஆளாகிறார்கள்.
இதுகுறித்து வைவா (விஐவிடபிள்யூஏ )மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு பொதுமக்களின் சிரமங்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தமிழக அரசின் இ-சேவை ஐடி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும், அவ்வாறு ஆவண செய்யும் பட்சத்தில் மாநில அரசின் விதிமுறைகளுக்கு முழுமையாக கட்டுப்பட்டு அரசு நிர்ணயிக்கும் கட்டணம் தவிர இதர கட்டணமோ, அதிக கட்டணமோ வசூலிக்கமாட்டோம் என்றும், பொது மக்களுக்கு முறையான தகவல் மற்றும் சேவைகளை செய்வோம் என மனுவில் தெரிவித்துள்ளனர்


