ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயின் அதிபரான ராபர்ட் முகாபே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
1980ல் பதவியேற்ற ராபர்ட் முகாபே 37 ஆண்டுகளாக அசைக்க முடியாத தலைவராக இருந்தார்.
சில காரணங்களாக ராபர்ட் முகாபேக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனால் ராபர்ட் முகாபே கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இதனை அடுத்து தனது பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டிருந்தது, ராபர்ட் முகாபே தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளார்.


