December 5, 2025, 5:26 PM
27.9 C
Chennai

அதிமுகவில் அணியும் கிடையாது பிணியும் கிடையாது: செல்லூர் ராஜு!

sellur-raju
sellur-raju

மதுரை: பேசினார்.

மதுரை மீனாட்சி மகளிர் கலைக்கல்லூரி பின்புறம் உள்ள பந்தல்குடி கால்வாயில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளரிடம் பேசிய அவர், செல்லூர் பந்தல்குடி வாய்க்காலில் இருந்து பெருமளவிலான கழிவுநீர் வைகை ஆற்றில் கலக்கிறது இதனை தவிர்க்கும் பொருட்டு இங்கே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உடன் இணைந்து செயல்படுத்தப்பட்டுள்ளது.

ALSO READ: ஆணித்தரமான அரசு அதிமுக.,! திமுக., எனில் நழுவிச் சென்றிருக்கும் : செல்லூர் ராஜு!

இங்கு ஆறு சுத்திகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. கழிவுகள் அகற்றப்பட்டு சுத்தமான தண்ணீர் பூங்காக்கள் மற்றும் பல தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு மீதமுள்ள தண்ணீர் வைகை ஆற்றில் கலந்து விடப்படும். இரண்டு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த மையம் துவங்கப்பட்டுள்ளது. இதன் தொடர் பராமரிப்புக்காக மாநகராட்சியின் பொது நிதியில் இருந்து 65 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை சுற்றி உள்ள 33 ஊரணிகளில் 13 தற்போது சீரமைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு வாய்ப்பாக அமையும். 16 ஊரணிகளில் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன

மேலும், 6 ஊரணிகளில் பணிகள் விரைவில் தொடங்கப்படும். மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் தல்லாகுளத்தி
லுள்ள திருமுக்குளம் டவுன்ஹால் ரோடு தெப்பக்குளம் ஆகியவை தற்போது மாநகராட்சியால் சீரமைக்கப்பட்டு வருகிறது.

ALSO READ: அதிமுக.,வில் உழைப்பவர்க்கே மரியாதை, பதவி தேடி வரும்: செல்லூர் ராஜு!

மதுரை மாநகருக்குள் மட்டும் தற்போது 412 ஆழ்குழாய் கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன அவை அனைத்தையும் மழைநீர் சேகரிப்புக்காக மாற்றம் செய்யப்பட மதுரை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுளுக்கும் தங்கு தடையின்றி குடிநீர் கிடைப்பதற்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

மேலும், அவர் கூறுகையில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு பணிகளை பாராட்ட மனமின்றி எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் தொடர்ந்து புகார் செய்து வருகிறார். நடைபெறுகின்ற பணிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரியும்.

ALSO READ: ஸ்டாலினுக்கு விவசாயியாக நடிக்கக் கூட தெரியல: செல்லூர் ராஜு நக்கல்!

மதுரையை மட்டுமே எடுத்துக்காட்டாக கொண்டால் கடந்த 10 ஆண்டுகளில் மிக அபாரமான வளர்ச்சியை மதுரை பெற்றுள்ளது.
கரோனா பெருந்தொற்று காலத்திலும்கூட தமிழக அமைச்சர்கள் மக்கள் பணியை தொடர்ந்து ஆற்றி வந்தது எல்லோருக்கும் தெரியும்.

அதிமுகவை பொறுத்தவரை எந்த அணியும் கிடையாது அங்கு பிணியும் கிடையாது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசி பெற்று ஆட்சியை மூன்றாவது முறையாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமையும். அதற்குரிய பணிகளை தொடர்ந்து அதிமுக செய்து வருகிறது என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories