December 5, 2025, 2:32 PM
26.9 C
Chennai

மதுரை மாவட்டத்தில் கிரானைட் தொழிலுக்கு அனுமதி தருமாறு உரிமையாளர்கள் கோரிக்கை!

madurai-granie

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிரானைட் நிறுவனங்கள் தொழில் நடத்த தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்க வேண்டும் என்று மதுரை மாவட்ட கிரானைட் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மதுரை செய்தியாளர் அரங்கத் தில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த கிரானைட் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பி.ராஜசேகரன், கடந்த 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி கிரானைட் நிறுவனங்களின் விதிமீறல் என மதுரை மாவட்ட ஆட்சியரால் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன்பேரில் குற்ற வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

மதுரை மாவட்டத்தில் அப்போது செயல்பட்டு வந்த 175 கிரானைட் குவாரிகளில் 84 குவாரிகள் மீது வழக்கு தொடுக்கப்பட்டன. இதன் மீதான வழக்கு விசாரணை முடியும் வரை மீதமுள்ள 91 குவாரிகள் இயங்க தடை விதிக்கப்பட்டது. தமிழக அரசின் உத்தரவு காரணமாக இயங்காத 91 குவாரிகளுக்கும் ஏன் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் தொழில் நடைபெறவில்லை என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்குரிய விளக்கத்தை நாங்கள் அளித்துள்ளோம்.

கடந்த 8 ஆண்டுகளாக இந்த வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில் சில வழக்குகள் இன்னும் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யப்படவில்லை இதன் காரணமாக எங்களது தொழில் மிகவும் நலிவடைந்து உள்ளது.

இதனை சார்ந்து வாழும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வியல் பாதிக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் தங்குதடையின்றி கிரானைட் குவாரிகள் நடைபெற்று வரும் நிலையில் மதுரை மாவட்டத்தில் மட்டும் இந்த தடை நீடிப்பது மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக தமிழக அரசு மறு விசாரணை மேற்கொள்ள வேண்டும். இந்த விசாரணையின் முடிவில் விதிமீறல் நடைபெற்ற குவாரிகளில் அரசு அபராதம் விதிப்பதோ அல்லது உரிமத்தை ரத்து செய்வதோ செய்யட்டும். அதுவரை எங்களது தொழில் தடையின்றி நடைபெறுவதற்கு தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உத்தரவிட வேண்டுகிறோம் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories