February 21, 2026, 10:57 PM
27.3 C
Chennai

சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் மாநில செயற்குழுக் கூட்டம்!

sabarimalai-ayyappa-seva-samajam
sabarimalai-ayyappa-seva-samajam

சபரிமலை ஐயப்பசேவா சமாஜம் தென் தமிழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் 18/11/2020 புதன் கிழமை #திண்டுக்கல் மாவட்டம் #பழனியில் மெய்த்தவ பொற்சபையில் மாநிலத் தலைவர் ராஜகோபால் துரை ராஜா தலைமையில், தேசிய செயலாளரும், தென் தமிழகத்தின் பிரபாரியுமான Dr. கணேசன் முன்னிலையில் நடைபெற்றது.

செயற்குழுவில் மாநில பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் மாநில அமைப்பு செயலாளர் சிவப்பிரகாசம், மாநில நிர்வாக செயலாளர் ஜெயக்குமார் மாநில பொருளாளர் செந்தில் குமார் மற்றும் மாநில நிர்வாகிகளும் தென் தமிழகத்தின் அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

sabarimalai-ayyappa-seva-samajam1
sabarimalai-ayyappa-seva-samajam1

செயற்குழு கூட்டம் தென் தமிழகத்தின் மாநிலத் துணைத் தலைவர் சந்திரமௌலீஸ்வரன் வரவேற்புரை வழங்க இனிதே துவங்கியது. முதலாவதாக நமது சமாஜத்தின் மேலான வளர்ச்சிக்கு நாம் அனைவரும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து மாநில மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்களிடம் ஆலோசனை மற்றும் கருத்து கேட்கப்பட்டது. அதன் பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் செயற்குழுவில் ஏகமனதாக முடிவு செய்து நிறைவேற்றப்பட்டது.

  1. தென் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உடனடியாக மாவட்டக் கமிட்டி அமைக்க வேண்டும்.
  2. அனைத்து மாவட்ட, மண்டல, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி என அனைத்துப் பொறுப்பாளர்களும் கட்டாயம் ஆயுட்கால உறுப்பினர் ஆக விரைவில் சேர வலியுறுத்தப்பட்டது.
  3. தென் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஐயப்ப சுவாமியின் உத்திர பூஜையை மாவட்டத்தில் 100 இடங்களில் மாதந்தோறும் நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
  4. பிரபாவி மாவட்டமாக கீழ்க்கண்ட 6 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்ட உள்ளது. கோயம்புத்தூர், தேனி, தஞ்சாவூர், திண்டுக்கல், தூத்துக்குடி, தென்காசி. மேற்கண்ட 6 மாவட்டப் பொறுப்பாளர்களும் அதற்கான வேலைகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.
  5. காம்யுஷக நிதி மற்றும் மாதாந்திர வரவு செலவு கணக்குகளை முறையாக பிரதி மாதம் 30 ம் தேதிக்குள் மாநிலத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
  6. நமது சமாஜத்தின் அய்யப்ப வாகினி மாதாந்திர பத்திரிகையை ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 1000 ஐயப்ப பக்தர்களுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
  7. அடுத்த பொதுக் குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் நடைபெறும் மாவட்டங்கள் முடிவு செய்யப்பட்டது.
  8. நமது சமாஜத்தின் மகளிர் மோக்சா பொறுப்பாளர்கள் 3 மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டது.
  9. மேலும் மாநிலக் கமிட்டியின் அனைத்து பொறுப்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்…
    செயற்குழுவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மெய்த்தவ பொற்சபையின் ஸ்ரீ செந்தில் சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்கள்…
    தென் தமிழகத்தின் மாநில செயற்குழு மாநில செயலாளர் திண்டுக்கல் ராமகிருஷ்ணன் நன்றியுரை நல்க இனிதே நிறைவுற்றது…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories