கதை டிஸ்கஷனில் மயக்க மருந்து கலந்து நடிகை பாலியல் பலாத்காரம்!

story-discussion
story-discussion

புழல் அடுத்த சூரப்பட்டு சீனிவாசன் நகரை சேர்ந்த முகமது இப்ராகிம் மகள் சமீரா (22). எதிரொலி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள இவர், நேற்று முன்தினம் புழல் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், செங்குன்றம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (55), செங்குன்றம் அடுத்த கோடுவெளி பகுதியில் ஜெயசூர்யா பொறியியல் கல்லூரி நடத்தி வருகிறார். இவர், ஒரு திரைப்படம் தயாரிக்க உள்ளதாகவும், அதில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்றும் என்னிடம் கூறினார். அதற்கு நான் சம்மதம் தெரிவித்தேன்.

இதையடுத்து, கதை டிஸ்கஷனுக்கு சென்றபோது, கோவிந்தராஜ் கொடுத்த மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்தில் நான் மயங்கி விட்டேன்.

அபோது, அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும், அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, எனக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்றால், அந்த வீடியோவை இணையதளத்தில் வெளிவிடுவதாக என்னை மிரட்டினார்.

இது சம்பந்தமாக, கடந்த 2019ம் ஆண்டில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தேன். அந்த புகார், அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, தற்போது நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு, கோவிந்தராஜின் அடியாளான ஜெயக்குமார் என்பவர் என்னை தொடர்புகொண்டு, கோவிந்தராஜ் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரை திரும்ப பெற வேண்டும். அவர் சொல்வதை கேட்டு நடந்துகொள். இல்லையென்றால், நீ எனக்கு பணம் தரவேண்டும் என பொய் புகார் அளிப்பேன் என மிரட்டினார்.

இதனையடுத்து, என் மீது கடந்த செப்டம்பர் 2019ம் ஆண்டு, ஜெயக்குமார் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் தொடர்பாக, அம்பத்தூர் காவல் நிலையத்துக்கு நான் சென்று, ஜெயக்குமாரிடம் எந்த பணமும் வாங்கவில்லை என விளக்கம் அளித்தேன்.

இதனையடுத்து, அம்பத்தூர் போலீசார் நீதிமன்றம் சென்று, இப்பிரச்னையை தீர்த்துக் கொள்ளுமாறு கூறி, என்னை அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 17ம் தேதி மாலை 3 மணி அளவில் நான் வீட்டிலிருந்தபோது, என் வீட்டுக்கு கோவிந்தராஜின் அடியாட்களான ஜெயக்குமார், நக்கீரன், பூர்ணிமா மற்றும் 4 ஆண்கள், 4 பெண்கள் வந்து என்னையும், என் தாயாரையும் தகாத வார்த்தைகளால் திட்டினர். ஜெயக்குமார் என் கழுத்தை பிடித்து நெரித்து, கோவிந்தராஜ் சொல்வதை மறுக்காமல் கேட்க வேண்டும்.

இல்லையெனில் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டினார். அப்போது உடன் இருந்த அடியாட்கள் என்னையும் என் தாயாரையும் ஆபாசமாக பேசியதோடு, எங்களை சராமரியாக அடித்து உதைத்தனர்.

எனவே, எங்களை கொடூரமாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த மேற்கண்ட கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதுகுறித்து புழல் போலீசார் கோவிந்தராஜ் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு எண் 61, 147, 447, 448, 294பி, 323 மற்றும் 506(1) ஆகிய பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories