December 6, 2025, 10:28 AM
26.8 C
Chennai

கடலில் மிதந்து வந்த மூட்டைகள்! இராமநாதபுரத்தில் அதிர்ச்சி!

Bundle - 2025

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடல் பகுதியில் கடலில் மிதந்துவந்த மூட்டைகளை போலீசார் கைப்பற்றினர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடல் பகுதி கரையோரத்தில் நேற்று அதிகாலை சில மூட்டைகள் கடலில் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள், கடலில் மிதந்துவந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர்.

அப்போது அந்த மூட்டைகளில் மஞ்சள் இருப்பது தெரியவந்தது. சுமார் 8 மூட்டைகளில் இருந்த 320 கிலோ மஞ்சளை கைப்பற்றிய சுங்கத்துறையினர் அதை அலுவலகம் கொண்டு சென்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அதிகாரிகள், இலங்கையில் உள்நாட்டு விவசாய பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக வெளிநாடுகளில் இருந்து மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்நாட்டில் மஞ்சள் வகைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் இந்தியாவில் இருந்து மஞ்சளை கடல் வழியாக இலங்கைக்கு கடத்திச் செல்கிறது ஒருசில கடத்தல் கும்பல். இவர்கள் மஞ்சளை கடல்வழியாக கடத்திச்சென்று கொண்டிருக்கும் போது, இடையே இந்திய கடற்படை அல்லது கடலோர காவல் படையினரின் ரோந்து கப்பலை அவர்கள் பார்த்திருக்க கூடும்.

இதனால் மஞ்சள் மூட்டைகளை கடலில் போட்டுவிட்டு அவர்கள் தப்பி சென்றிருக்கலாம். இதனால் கடலில் போடப்பட்ட மஞ்சள் மூட்டைகள் காற்றின் திசை மற்றும் கடல்நீரின் நீரோட்ட வேகத்தால் இங்கு கரை ஒதுங்கி இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories